திருவாரூரில் செந்தொண்டர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கல்
திருவாரூர், மே 4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24ஆவது மாநாடு, செந் தொண்டர் பேரணியில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து பங்கேற்ற செந்தொண்டர்களை பாராட்டி, சான்றி தழ் வழங்கும் நிகழ்ச்சி சிபிஎம் மாவட்டக்குழு சார்பாக நடைபெற்றது. திருவாரூர் ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட அலுவலக சங்க கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிபிஎம் மாவட்டசெயற்குழு உறுப்பி னர் கே.பி.ஜோதிபாசு தலைமை வகித் தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.கே. வேலவன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி ஆகியோர் செந்தொண்டர் களை வாழ்த்தி உரையாற்றினார்கள். தொடர்ந்து மாநில செயற்குழு உறுப்பி னர் எஸ்.முத்துக்கண்ணன் செந் தொண்டர்களை பாராட்டி, சான்றிதழ் வழங்கி, சிறப்புரையாற்றினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா. கோமதி, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் ஆர்.எஸ்.சுந்தரய்யா, டி.லெனின், எம்.டி.கேசவராஜ் மற்றும் செந்தொண்டர் அமைப்பின் துணை கேப்டன்கள் உட்பட நூற்றுக்கும் மேற் பட்ட செந்தொண்டர்கள் கலந்துகொண்டனர்.