காலநிலை மாற்றம் குறித்த தற்போதைய விவாதங்களில் உற்பத்தி முறைகளின் பங்கு புறக்கணிக்கப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். முதலாளித்துவ உற்பத்தி முறையே காலநிலை நெருக்கடிக்கான முதன்மைக் காரணம் என்பதை மறைக்கும் விதமாக, தனிநபர் நுகர்வு முறைகளே பிரச்சனைக்கு காரணம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.முதலாளித்துவ சிந்தனையாளர்கள் காலநிலை நெருக்கடியை வர்க்கம் சாரா பிரச்சனையாக சித்தரிக்கின்றனர். நுகர்வைக் கட்டுப்படுத்துவதன் மூலமோ அல்லது மாசுபடுத்துபவர்களுக்கு எதிரான
விலை உயர்வு மூலமோ இப்பிரச்சனையைத் தீர்க்கலாம் என்கின்றனர்.
உலக காலநிலை மாற்ற மாநாடு, கொலம்பியாவின் காலி நகரில் துவங்கியுள்ள நிலையில் அதன் விவரங்களை உற்றுநோக்க வேண்டியுள்ளது.
1. தற்போதைய விவாதங்களில் காணப்படும் குறைபாடுகள்:
z தனிநபர் நுகர்வு மீதான அதிக கவனம்.
z வருமான ஏற்றத்தாழ்வுகளின் பங்கு மட்டுமே பேசப்படுதல்.
z வளர்ந்த நாடுகள் (எதிர்) வளரும் நாடுகள் என்று பிரச்சனையை, நாடுகளுக்கு இடையிலானதாக முன் வைத்தல்.
z நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளின் மேலாதிக்கம்.
2. மறைக்கப்படும் உண்மைகள்:
w பொருட்கள் உற்பத்தித் துறையே அதிக கார்பன் வெளியேற்றத்திற்கு காரணம்.
w பொருட்களின் உற்பத்தி இலாப நோக்கத்தால் இயக்கப்படுகிறது.
w தொழிற்சாலைகள், எஃகு, சிமெண்ட், உர உற்பத்தி ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்பு.
w முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படை முரண்பாடுகள்.
3. தொழிலாளர் வர்க்கத்தின் நிலை:
z உற்பத்தி முறைகள் தொழிலாளர்கள் மீது திணிக்கப்படுகின்றன.
z மாசுபட்ட சூழலில் வாழ மற்றும் வேலை செய்ய நிர்ப்பந்தம்
z காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள்
- வாழ்வாதார இழப்புகள்
4. தீர்வுக்கான வழிகள்:
wஎளிய மக்களின் அடிப்படைத் தேவை களை, லாபவெறியின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்.
w உற்பத்தி முறைகள் மீதான பொது கட்டுப்பாடு அவசியம்
w தொழிலாளர்களின் உரிமைகளை வலுப்படுத்துவது முக்கியம்.
w பெரும்பான்மை மக்களின் நலன் சார்ந்த உற்பத்தி முறைகள் அமலாக வேண்டும்.
காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டம் என்பது, தனிநபர் நுகர்வு மாற்றங்களை மட்டும் வலியுறுத்துவதைத் தாண்டி, முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படை மாற்றத்தை நோக்கி நகர வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் ஒருங்கிணைத்த அணுகு“காலநிலை மாற்றத்திற்கான தீர்வு என்பது நுகர்வை மட்டுப்படுத்துவதல்ல, மாறாக நாம் என்ன உற்பத்தி செய்கிறோம், எப்படி உற்பத்தி செய்கிறோம் என்பதில் பெரும்பான்மை மக்களின் செல்வாக்கை, அதிகாரத்தை உறுதி செய்வதாகும்’ என பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.