tamilnadu

img

தாலுகாவில் முதலிடம்; ஒரேயொரு ஆசிரியர்தான் தொண்டியக்காடு அரசுப் பள்ளி கவனிக்கப்படுமா?

திருத்துறைப்பூண்டி, ஜூலை 10 - திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா தொண்டியக்காடு கிரா மத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் முனங்காடு, புதுக்குடி, மேலக்காடு, மேல தொண்டியக்காடு, கற்பகநாதர்குளம் ஆகிய கிராமங்களில் இருந்து மாணவ-மாணவிகள் பயில் கின்றனர். இந்தப் பள்ளியானது நடுநிலைப் பள்ளியில் இருந்து, உயர்நிலைப் பள்ளி யாக தரம் உயர்ந்து, சுமார் 9 ஆண்டுகளாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது. திருவாரூர் மாவட்டத் தில் பெயர் சொல்லும் பள்ளி யாக உருவெடுத்தது மட்டு மின்றி, அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலர் என்எம்எம்எஸ் தேர்விலும் தேர்ச்சி பெற்று, முத்துப் பேட்டை தாலுகாவில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.  இத்தகைய நற்பெயர் களை பெற்ற பள்ளியில், தற்போது ஒரே ஒரு அரசு  ஆசிரியர் மட்டும் உள்ளார். அவரே ஆசிரியரும், தலை மை ஆசிரியரும் ஆவார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்றுவதற்கு பெற்றோர் கழக தலைவர்கள் ரூ. 2 லட்சத்துக்கான காசோலை யை அரசிடம் சமர்ப்பித்தும்  இதுவரை மேல்நிலைப் பள்ளியாக மாற்றுவதற்கான எந்த ஆணையும் வழங்க வில்லை.  மேலும் இந்தப் பள்ளி யில் ஆண், பெண் கழிப்பறை வசதி இல்லை. சுற்றுச்சுவர் இல்லை. மாணவ-மாணவி யர் விளையாட்டு அரங்கம் இல்லை. இந்தப் பள்ளியின் தரத்தை நன்றாக அறிந்த வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் இதுகுறித்து கண்டுகொள்வதில்லை. திருவாரூர் மாவட்டத் திற்கு பெருமை சேர்த்தும், முத்துப்பேட்டை தாலுகா வில் முதல் இடத்தில் இருக்கும் தொண்டியக்காடு உயர்நிலைப் பள்ளியை மாவட்ட ஆட்சியரும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், தொண்டி யக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியானது ஒரேயொரு ஆசிரியரான   தலைமை ஆசி ரியரை மட்டும் கொண்டு, வரும் காலங்களில் எப்படி 100 சதவீதம் தேர்ச்சியை கொடுக்க முடியும். தங்கள் குழந்தைகளை எப்படி இந்த அரசுப் பள்ளியில் சேர்ப்பது என்பது அப்பகுதி மக்களின் வேதனையாக உள்ளது என பொதுமக்க ளும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.