tamilnadu

img

அறிவியல் கதிர் - ரமணன்

செயற்கை இனிப்பு  சேர்த்துக் கொள்ளலாமா? 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்க ரைக்குப் பதிலாக சுக்ரலோஸ் எனும்  செயற்கை இனிப்பை சேர்த்துக் கொள்  ளும்போது என்ன விளைவுகள் உண்டா கின்றன என்பது குறித்து இந்திய ஆய்வா ளர்கள் சோதனை செய்துள்ளார்கள். சென்னை சர்க்கரை நோய் ஆய்வு நிறு வனம் இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது.  இந்தியாவில் பரவலாக பயன்படுத் தும் செயற்கை இனிப்பில் சுக்ரலோஸ் ஒன்றாகும். இந்த சோதனையில் சுக்ர லோஸ் இதயம் மற்றும் உடல் ஆரோக்கிய  வளர்சிதை மாற்றத்தில் என்ன பாதிப்பு களை ஏற்படுத்துகிறது என்பது தெரிய  வந்துள்ளது. சிறிய அளவில் எடுத்துக்  கொள்ளும் சுக்ரலோஸ், இரத்த சர்க்கரை  அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை; சுக்ரலோஸ் பயன்படுத்தும்போது உடல்  எடை, இடுப்புச் சுற்றளவு மற்றும் பாடி மாஸ்  இன்டெக்ஸ் எனப்படும் உடல் எடை விகி தம் ஆகியவற்றில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது: சர்க்கரை நோய் உள்ள வர்கள் செயற்கை இனிப்பை பயன் படுத்துவது குறித்து உலக சுகாதார நிறு வனத்தின் எச்சரிக்கையை இந்த ஆய்வு கேள்விக்குள்ளாக்குகிறது. 

நவீன ரச வாதம் 

டைட்டானியம் மூலகத்தை அதி வெப்ப நிலைக்கு சூடாக்கி அதிலிருந்து வெளி வரும் அயனிகளை இன்னொரு உலோகத்தின் மீது செலுத்தி கன மான மூலகம் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள்.  அரிதான டைட்டானி யம்-50 எனும் ஐசோடோ ப்பை 1650செல்சியஸ் சூடாக்கும்போது அது  அயனிகளை வெளிவிடு கிறது. அவற்றை புளுடோ னியம் உலோகத்தின் மீது மோதும்போது லிவர்மோரியம் எனும் புதிய உலோகம் உண்டாகிறது. இதன் அணு எண் 116. இதைவிட கனமான உலோகம் ஒகனேசன். அதன்  அணு எண் 118. லிவர்மோரியம் 2000 ஆண்டிலேயே தயாரிக்கப்பட்டாலும் இப்போது  கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய முறையானது மேலும் கனமான உலோகங்களை கண்டு பிடிப்பதற்கான முதல் படி . பெர்க்கிலி சோதனைச் சாலையில் உள்ள 88 அங்குல சைகிளோட்ரான் இயந்தி ரத்தில் இந்த சோதனைய செய்வதற்கு 22 நாட்கள் ஆனது. அதன் பிறகு கூட வெறும்  இரண்டே இரண்டு அணுக்கள்தான் கிடைத்தன. இதைவிட கனமான உலோகத்தை உண்டாக்க 10 மடங்கு அதிக காலம் தேவைப்படும் என்கிறார் மூலக்கரு இயற்பிய லாளர் ரெய்னியர் கிரக்கென்.

உண்ணாநோன்பிருந்தால் நோய்களை தடுக்கலாம்! 

ஆட்டோஃபேகி(autophagy) எனப்படும் சுய அழிவு  செயல்பாடு மூலம் செல்களி லுள்ள தேவையற்ற மற்றும் செயல்படாத உறுப்புகள் அழிக்கப்படுகின்றன. இந்த  செயல்பாட்டின் குறைபாட்டிற்கும் வயது மூப்பு தொடர்பான சர்க்கரை நோய், புற்று நோய், இதய கோளாறுகள், நரம்பு சிதைவு ஆகியவற்றிற்கும் தொடர்பு உண்டாம். சீரான கால இடைவெளியில் உண்ணா நோன்பு இருப்பதன் மூலம் ஆட்டோஃபேகி செயல்பாட்டை தூண்ட முடியுமாம்.  உண்ணா நோன்பு இருக்கும் போது ஸ்பெர்மிடின் எனும் வேதிப்  பொருள் சுரப்பதே இதற்குக் கார ணமாம். குறைவான அல்லது அதி கமான கொழுப்பு உணவுகள், அதிக சத்துள்ள உணவுகள் அல் லது உண்ணா நோன்பிருத்தல் போன்ற உணவுப் பழக்கங் கள் மேற்சொன்ன நோய்கள்  வளர்வதில் தாக்கம் செலுத்தக் கூடும். வருங்காலத்தில் இந்த நோய்கள் அதிகரிக்கும் என எதிர்  பார்க்கப்படுகிறது.  குறைவான கலோரி மற்றும் உண்ணா நோன்பு போன்ற உண வுப்பழக்க குறுக்கீடுகள் மூலம்  மூப்படைவதை தாமப்படுத்து வதும் வாழ்நாள் அதிகரிப்பும் சாத்தியமாகலாம். தட்டை புழுக்  கள், யீஸ்ட், ஈ, எலி மற்றும்  மனித செல்களில் நடத்தப்பட்ட  சோதனைகளில் இடைவெளி விட்டு உண்ணா நோன்பு இருக்  கும்போது செல்களில் ஸ்பெர்மி டின் அளவு அதிகரிப்பதும் அதன்  மூலம் ஆட்டோஃபேகி தூண்டப்படுவதும் காணப்பட் டது. ஸ்பெர்மிடின் வழியாக  ஆட்டோஃபேகி நெறிப்படுத்தப் படுவது படிநிலை வளர்ச்சியில் (பரிணாம) பாதுகாக்கப்பட்ட ஒரு செயல்பாடு ஆகும். இந்த  ஆய்வை பாரிஸ் பல்கலைக்கழ கம், கிரீஸ், ஆஸ்திரியா ஆகிய நாடுகளிலுள்ள ஆய்வாளர்கள் இணைந்து நடத்தியுள்ளனர். நேச்சர் செல் பயாலஜி Nature Cell Biology எனும் இதழில் இது  வெளிவந்துள்ளது.

வெறும் 15 கேபிள்கள்தான் ஆஸ்திரேலியாவை உலகோடு இணைக்கிறது? 

இணைய சேவைகள் ஆஸ்திரேலிய பொரு ளாதாரத்திற்கு ஆண்டு ஒன்றிற்கு 167பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டித் தருகின்றன. அன்றாட சமூக ஊடகத் தக வல்கள் முதற்கொண்டு உலகளாவிய பொரு ளாதாரத்தை நடத்திச் செல்லும் மாபெரும் பரிவர்த்தனைகள் வரை இதன் மூலம் நடைபெறுகின்றன. இந்த வடங்கள் கட லின் அடியில் 8000 மீட்டர் ஆழத்தில் புதைக்  கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் எகாதிபத்தியம் தனது காலனி நலன்களை பாதுகாப்ப தற்காக 19ஆம் நூற்றாண்டில் இவற்றை  தொடங்கியதாம். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜி யத்தின் ‘நரம்பு மண்டலம்’ என்று அழைக்கப்  பட்டது. 1858ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடலின்  குறுக்கே போடப்பட்ட வடங்கள் கண்டங்க ளுக்கிடையே விரைவான தகவல் தொடர்பை செயல்படுத்திக் காட்டியது. வணிகத்தையும் அரசு நிர்வாகத்தையும் இது புரட்சிகரமான மாற்றத்திற்கு உட்படுத்தியதாம். . நீர் பாய்ச்சும் தோட்டக்குழாயின் அளவேயுள்ள இவற்றின் உள்ளே கண்ணாடி இழைகள் பிளாஸ்டிக் உறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு தரவுகளை ஒரு வினாடிக்கு 300 டெரா பைட் வேகத்தில் கடத்துகின்றன.  இவை விபத்து மற்றும் எதிரிகளால் சேதப்படாமல் இருக்க 18 மில்லியன் டாலர்கள்  செலவழித்து புதிய மய்யம் ஒன்றை ஆஸ்தி ரேலியா அமைக்கவுள்ளதாம்.