மதுரை,நவ.24- வலதுசாரி சக்திகளை முறியடிக்க இடதுசாரி அணி திரண்டெழ வேண்டும் என்று சிபிஎம் மதுரை மாநகர் மாவட்ட மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட 24வது மாநாடு நவம்பர் 24 ஞாயிறன்று துவங்கியது. இந்த மாநாட்டை துவக்கி வைத்து மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் உரையாற்றினார். அவரது உரையின் அம்சங்கள் வருமாறு: கட்சி விதிப்படி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மாநாடுகளில் நாடு முழுவ தும் 10 லட்சம் உறுப்பினர்கள் கிளை மாநாடுக ளில் பங்கேற்கின்றனர். அடுத்த ஜனவரி 3, 4,5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் மாநில மாநாடும், ஏப்ரல் மாதம் மதுரையில் மூன்றா வது முறையாக அகில இந்திய மாநாடும் நடை பெற உள்ளன. மக்கள் வாழ்வின் நெருக்கடி நிலை இன்றைய சூழலில் மக்களின் வாழ்க்கை நிம்மதியற்று உள்ளது. கடுமையான விலை வாசி உயர்வு நிலவுகிறது. தொழில்நுட்பங்கள் அபரிமிதமான வளர்ச்சி பெற்றிருந்தாலும் விவ சாய உற்பத்தி குறைந்துள்ளது. 1967-68 கால கட்டத்தில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது அறி முகமான கோதுமை, இன்று ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உற்பத்தி உயர்ந்துள்ளது. ஆனால் உற்பத்தி பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெரும் நிலப்பிரபுகளின் கைகளுக்குச் செல்வதால் மக்களுக்கு போதிய உணவு கிடைக்கவில்லை. சர்வதேச அரங்கில் போர் நெருக்கடி இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் பெண்கள் குறிவைக்கப்பட்டு இன அழிப்பு நடத்தப் படுகிறது. ஐ.நா. போர் நிறுத்தத் தீர்மானத்தை இஸ்ரேல் நிராகரிக்கிறது. அமெரிக்கா நேரடி உதவி செய்யவில்லை என்றாலும் இஸ்ரேலு க்கு ஆயுத தளவாடங்களுக்கு பெரும் நிதி வழங்குகிறது. அப்பாவி மக்களைக் கொல்லும் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஆதரவாக மோடி அரசு உள்ளது.
வலதுசாரி எழுச்சியும் பொருளாதார நெருக்கடியும்
ரஷ்யா-உக்ரைன் போரில், முன்னாள் சோவி யத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன், இன்று அமெரிக்காவின் ஆதரவோடு தனி நாடாக செயல்படுகிறது. இன்றைய ரஷ்யா சோசலிச நாடு அல்ல, முதலாளித்துவ நாடாக மாறியுள்ளது. ஆனாலும் ரஷ்யா மீதான அமெ ரிக்காவின் பொருளாதார தடைகள் உலகப் பொ ருளாதாரத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கி யுள்ளன. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் வலதுசாரி அரசியல் வேலை யின்மை, பொருளாதார நெருக்கடியை அதிக ரித்துள்ளது.
இலங்கையில் இடதுசாரி வெற்றி
இலங்கையில் தமிழர்-சிங்களர் பகைமை யை வளர்த்து பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திய மகிந்த ராஜபக்சே நாட்டை விட்டு ஓட வைக்கப்பட்டார். சிங்களர், தமிழர், முஸ்லிம்கள் என அனைவரும் முதன்முறை யாக இடதுசாரி கட்சிக்கு வாக்களித்து 159 இடங்க ளில் வெற்றி பெற வைத்துள்ளனர். இந்தியாவில் பாசிச எதிர்ப்பு இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுத லில் பாஜக பாசிச குணம் கொண்ட ஆட்சியை நடத்துகிறது. புல்டோசர் ஆதிக்கம் அதிகரித் துள்ளது. ஒரு நாடு-ஒரு தேர்தல், தேசிய உரிமை பாதுகாப்பு சட்டம், பொது சிவில் சட்டம் என நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்க முயற்சிக்கிறது. இதனை எதிர்க்க மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் நிலை
தமிழகத்தில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றி ணைந்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள் ளன. திமுக அரசின் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, அரசு ஊழியர் மற்றும் போக்குவரத்து ஊழியர்களின் உரிமை மறுப்பு ஆகியவற்றை எதிர்த்தும் போராடுகிறோம். சாம்சங் தொழிலாளர் சங்கப் பதிவுக்காக பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். மதுரை மாநாட்டின் முக்கியத்துவம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் ஐந்து ஆண்டுகளில் சிறப்பான பணி யாற்றியுள்ளார். இந்தியாவிலேயே இல்லாத வகையில் பல முன்முயற்சிகளை எடுத்துள் ளார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி பாஜக இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது கவலைக்குரியது. மதுரையில் நடைபெறவுள்ள அகில இந்திய மாநாடு இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வெற்றி மாநாடாக அமைய வேண்டும். 5 லட்சம் பேர் கொண்ட பேரணி, 25 ஆயிரம் பேர் கொண்ட செந்தொண்டர் அணிவகுப்பு, ஆயிரம் பேர் கொண்ட வரவேற்புக் குழு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.