நாகுடியில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்
அறந்தாங்கி, ஏப்.30 - புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி கிராமத்தில் - பாலசுப்ரமணிய சுவாமி ஆலய பங்குனி உத்திர உற்சவ திருவிழாயொட்டி, முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, இந்த போட்டியில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாத புரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாட்டுவண்டிகள் போட்டியில் கலந்து கொண்டன. இதில் பெரிய மாடு, நடுமாடு, கரிச்சான் மாடு, என மூன்று பிரிவுகளாக நடை பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டன. போட்டியில், ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாட்டின் உரிமையாளர்களுக்கு ரூ.1.81 லட்சம் ரொக்கப் பரிசும் கோப்பைகளும் வழங்கப் பட்டன. நாகுடி காவல் துறையினர் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.