திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரக் குழு உறுப்பினர் ஆர்.நந்தகோபாலின் குடும்ப திருமண வரவேற்பு விழாவில், மணமக்கள் என்.ரகுநாதன் - ஆர்.ஹரிணி ஆகியோர் தீக்கதிர் நாளிதழுக்கு 10 ஆண்டு சந்தா தொகை ரூ.20 ஆயிரத்தை தீக்கதிர் முதன்மை பொது மேலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான என்.பாண்டி, மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகியோரிடம் வழங்கினர். இந்நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.மைதிலி, வை.ஆனந்தன் மற்றும் கட்சியினர், மணமக்களின் குடும்பத்தார் பங்கேற்றனர்.