tamilnadu

img

மோடி முன்பாகவே பிரிக்ஸ் நாடுகளை மிரட்டிய டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதியாக 2-ஆவது முறையாக கடந்த  மாதம் பதவியேற்றுக் கொண்ட டிரம்ப், ‘பிரிக்ஸ் பிளஸ்’ பொருளா தார கூட்டமைப்பில் உள்ள  நாடு களின் மீது 100 சதவிகிதம் வரி விதிப்  பேன் என மிரட்டல் விடுத்திருந்தார்.  இந்நிலையில், ‘பிரிக்ஸ்’ கூட்ட மைப்பின் முக்கிய உறுப்பினராக  உள்ள இந்தியாவின் பிரதமர் மோடி,  தம்மைச் சந்திப்பதற்காக அமெரிக்கா வந்துள்ள நிலை யில், மோடி முன்பாக 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும்  என்று மீண்டும் நேரடியாகவே மிரட்டல் விடுத்துள்ளார்.

பிரிக்ஸ் நாடுகள் இணைந்து வர்த்தகம் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை  எதிர்கொள்ளும் வளரும் நாடுகள், ஜி-7, நேட்டோ, ஐரோப் பிய ஒன்றியங்களுக்கு மாற்றாகவும், அமெரிக்காவை மட்டுமே சார்ந்து இருக்காதவாறு, வர்த்தகத்தில் சமமான வாய்ப்பிற்கான சூழலை உருவாக்கும் நோக்கத்தில், ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பை ஏற்படுத்தி, தங்களுக்கு இடையி லான பொருளாதார உறவுகளை மேம்படுத்தி வருகின்றன. கேள்விக்குள்ளாகும் டாலரின் செல்வாக்கு மேலும், இக்கூட்டமைப்பு சர்வதேச வர்த்தகத்தில் பயன்  படுத்துவதற்காக டாலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளன.

அவ்வாறு புதிய  நாணயங்களை கொண்டு வந்தால், அது அமெரிக்க டால ருக்கான செல்வாக்கைக் கேள்விக்கு உள்ளாக்கும் என்ப தால், பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் மீது 100 சத விகிதம் வரி விதிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்  மிரட்டி வருகிறார். அந்த வகையிலேயே, பிரிக்ஸ் கூட்டமைப்பின் முக்கிய  உறுப்பு நாடான இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி,  அமெரிக்கா சென்றிருந்த நிலையில், அவர் முன்பாகவே, 100 சதவிகிதம் வரி விதிப்பேன் என்று மிரட்டல் விடுத் துள்ளார்.

அமெரிக்காவுக்கே பாதிப்பு ஏற்படும் பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா வரி விதித்தால் ஜி-7 நாடுகளுக்கும் அதன் தொழிலாளர்களுக்குமே பாதிப்பு  ஏற்படும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள அமெரிக்க முன்னேற்ற மையத் தகவ லின் படி ‘பிரிக்ஸ்’ நாடுகளே அமெரிக்க தொழிற்துறைக்கு தேவையான பொருட்களை கொடுத்து வருகின்றன. இந்த வரி விதிப்பு அமலானால் அமெரிக்காவுக்குள் கடு மையான நெருக்கடிகளை உருவாக்கும். மேலும் அமெ ரிக்காவுடன் நெருங்கிய பொருளாதார உறவுகளை கொண்ட  ஜி-7 கூட்டமைப்பு நாடுகளிலும் அந்த தாக்கம் எதிரொ லிக்கும். இது உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர் களுக்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.