tamilnadu

img

கலை வடிவம் மூலம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு

அ.விஜயகுமார்

ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தை மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடு கிறார்கள். இதையொட்டி நாடு முழுவதும் விழிப்புணர்வு பேரணிகள், நடைபயணம், மருத்துவமுகாம் போன்றவை நடைபெற்றன. கலைவடிவம் மூலமாகவும் மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் குறிப்பாக பெண்களிடத்தில் ஏற்படுத்த முடியும் என்பதை நிருபிக்கும் நிகழ்வு ஒன்று சென்னையில் நடைபெற்றது. அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மையம் ஏற்பாடு செய்திருந்த “ஆர்ட்கேன்” என்ற நிகழ்ச்சியில் ஓவியக் கலைஞர்களும் புற்றுநோயில் இருந்து மீண்டவர்களும் கலந்துகொண்டனர். மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்ப ஓவியக் கலையை ஒரு வழிமுறையாக பயன் படுத்தும் வகையில் குறித்த கால அளவு களில் சுயமாக மார்பகத்தை பரிசோதனை செய்வதின் முக்கியத்துவம் பற்றிய 7 வகையான ஓவியங்கள் தீட்டப்பட்டிருந் தன. அவை ஒவ்வொன்றும் பெண்ணுக்கு சுயமாக மார்பகத்தை பரிசோதிக்கிற படி நிலைகளை கொண்டவை. கேரள மியூரள் சுவரோவிய கலை வடித்தில் இந்த ஓவியங் கள் தீட்டப்பட்டிருந்தன.  இந்த சுவரோவியங்களை பிரபல ஓவியக் கலைஞர் ஆதர்ஸ் தீட்டியிருந்தார். இந்த ஓவியங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இதனை நடிகை பிரயகா மார்ட்டின் வெளியிட்டார். மல்லவரப்பு ஸ்டுடியோ நிறுவனர் தன்யா,  புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை மருத்துவர் டாக்டர் ரத்னா தேவி உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.
அச்சுறுத்தும் புற்றுநோய்
உலகில் பெண்களை அச்சுறுத்தி வரும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோயும் ஒன்று. அமெரிக்கா போன்ற மேலை நாடு களில் ஆறில் ஒருவர் மார்பகப் புற்று நோயால் உயிரிழக்கும்போது இந்தியா வில் இருவரில் ஒருவர் உயிரிழக்கிறார். எய்ட்ஸ், நீரிழிவு, இதயம் போன்ற நோய்கள் குறித்து சமூகத்தில் உள்ள விழிப்புணர்வை போல் மார்பகப் புற்றுநோய் குறித்து இல்லை. காரணம் இதுகுறித்து பேசவே சிலர் தயங்குகிறார்கள். குறிப்பாக பெண் களே இதுகுறித்து பேசத் தயங்குகிறார்கள். பெண்கள் 20 வயது முதலே மாதம் ஒரு முறை சுயமாக மார்பகத்தை வீட்டிலேயே பரிசோதித்துக்கொள்வதன் மூலம் இந்தநோயை எளிதாக கண்டறியலாம் என்றார் டாக்டர் ரத்னா தேவி. மார்பகத்தில் கட்டி, நிறம் மாறுதல் உள்ளிட்டவற்றை கண்டறிந்தால் உடனே மருத்துவரை சந்திப்பது அவசியம் என்றும் அவர் கூறினார். எல்லா கட்டிகளும் புற்றுநோய்க் கட்டிகள் அல்ல. இருப்பினும் சுயமாக நாமே இதுபுற்றுநோய் கட்டி புற்றுநோய் கட்டி அல்ல என்று முடிவு செய்வதை விட மருத்துவரை சந்திப்பது நல்லது.
சுயபரிசோதனை அவசியம் 
2022 ஆம் ஆண்டில் இதுவரை 20 லட்சத் துக்கும் அதிகமான புற்றுநோய் பாதிப்பு கள் கண்டறியப்பட்டுள்ளன. நகர்ப்புறத் தில் 24 பேரை பரிசோதித்தால் ஒருவர் மார்பகப் புற்றுநோயினாலும் கிராமப் புறங்களில் 60பேரில் ஒருவருக்கு இந்த நோய் கண்டறியப்படுவதாகவும் அவர் கூறினார், மாதம் ஒரு முறை 5 நிமிடம் இதற்காக பெண்கள் ஒதுக்கி படுக்கை அறையில் அல்லது குளியல் அறையில் சுயமாக பரிசோதனை செய்து கொண்டால் ஆரம்பத்திலேயே பாதிப்பை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் 2ஆவது 3ஆவது கட்டத்திற்கு செல்வதை தடுக்க முடியும் என்றார். சுற்றுச்சூழல் பாதிப்பு, நீரிழிவு, உடல் பருமன், உணவுப்பழக்க வழக்க மாற்றங் கள் ஆகியவை இந்த நோய்க்கான கார ணங்கள் என்று குறிப்பிடும் அவர், 5 முதல் 10 விழுக்காடு மட்டுமே மரபணு ரீதியாக ஏற்படுபவை என்கிறார். அப்படிப்பட்ட நபர் களும் அறிகுறிகளை ஆரம்ப நிலை யிலேயே கண்டறிந்தால் இந்த நோயில் இருந்து வெற்றிகரமாக விடுபடமுடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  ஓவியங்களை வெளியிட்டு பேசிய திரைக்கலைஞர் பிரயகா மார்ட்டின், நோயாளிகளுக்கும் சிகிச்சையளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தை கலை வடிவம் மூலமாக ஏற்படுத்தமுடியும் என்பதை இந்த நிகழ்ச்சி நிரூபித்துள்ளது என்றார். பெண்கள் சுயமாகவே தங்களது மார்பகங்களை பரிசோதனை செய்து கொள்வது பற்றி கற்பிக்கவும், விழிப் புணர்வை அதிகரிக்கவும், ஓவியக்கலை பயன்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்கள் பழமை வாத போக்கில் இருந்து விடுபட்டு இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாக பேசவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அவப்பெயர், சவால்கள்
புற்றுநோயில் இருந்து மீண்ட பிரபல பரத நாட்டிய கலைஞர் சோபனா பேசுகை யில், மார்பக புற்றுநோய் ஏராளமான சவால் களையும், சிரமங்களையும், அவப்பெய ரையும் சேர்த்தே வழங்குகிறது; ஆனால் உரிய நேரத்திற்குள் கிடைத்த மருத்துவ சிகிச்சையும், கனிவான பராமரிப்பும் இந்த கடும் சோதனையிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வருவதற்கு தமக்கு உதவுகிறது என்றும் கூறினார். மார்பக புற்றுநோய்க்காக அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை களை செய்துகொள்ள இந்தியா முழுவதிலு முள்ள பெண்கள் தயங்காது முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஓவியத்தின் மூலமாக மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்தமுடியும் என்பது தனக்கு மிகுந்த மனதிருப்தி அளிப்பதாக ஓவியங்களை தீட்டிய சுவரோவியக் கலைஞரான ஆதர்ஸ் குறிப்பிட்டார். இத்தகைய முன்முயற்சி ஆயிரக்கணக் கான பெண்களின் உயிரை காப்பாற்றக் கூடியது. அதே நேரத்தில் நாட்டின் பெருமை மிகு ஓவிய பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவும் இதுபோன்ற நிகழ்வு உதவும் என்றும் அவர் கூறினார்.