அம்மு, பப்பு இருவருமே அப்படியொரு பரிசு தங்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. பூங்காவில் அறிமுகமாகி நண்பராக மாறிய அந்த விஞ்ஞானி கொடுத்த பரிசு அது. அவர் எப்படி இவர்களுடைய நண்பரானார் என்பதே ஒரு சுவையான கதைதான். பூங்காவில் இருவரும் தினமும் விளை யாடி முடித்ததும் மணலில் உட்கார்ந்து பேச ஆரம்பிப்பார்கள். ஏதாவது கேள்வி கேட்பார்கள், அவர்களே பதில் சொல் வார்கள். அவர்களுடைய கேள்விகளே தனி ரகமாக இருக்கும். “மேகத்துக்குக் கால் இல்லை, றெக்கையும் இல்லை, ஆனா அது எப்படி நகருது?” –இது மாதிரியாகக் கேட்பார்கள். “நேத்து பார்த்த படத்திலே வர்ற மாயக்கம்பளம் போல நிஜத்திலே இருக்குமா,” என்று பேசுவார்கள். பதில் தெரியாவிட்டால் கூச்சப்படாமல் மற்றவர்களிடமும் கேட்பார்கள். இதையெல்லாம் ஒருவர் ரசித்துப் பார்த்துக்கொண்டு இருந்தார். தினமும் வரு கிறவர்தான் அவர். ஏதாவது படித்துக்கொண்டோ, எழுதிக்கொண்டோ இருப்பார். ஒருநாள் நம்ம பப்பு ஓடிக் கொண்டு இருந்தபோது கீழே விழுந்து விட்டான், அவனை அவர் தூக்கி விட்டார். இன்னொரு நாள் அவர் எழு திக்கொண்டிருந்த தாள்கள் காற்றில் பறந்த போது அம்மு ஓடிப்போய் எடுத்துவந்து கொடுத்தாள். இப்படியாக அவரும் அம்மு- பப்புவும் நண்பர்களானார்கள். அவருடனும் கதையடிப்பார்கள். அவரும் இவர்களோடு சளைக்காமல் பேசு வார். இவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்வார், எதையும் துருவித் துருவிக் கேள்வி கேட்கிற இவர்களுடைய பழக்கம் அவருக்கு ரொம்பவும் பிடித்துப்போனது. இவர்கள் யோசித்துப் பதில் சொல்வதற்கு அவரும் கேள்விகள் கேட்பார்.
ஒருநாள் அவர் இவர்களிடம், “பிரண்ட்ஸ், ஒரு ஆராய்ச்சிக்காக இமய மலைப் பகுதிக்குப் போறேன்” என்று கூறினார். அதைக் கேட்டு இருவரும் ஏமாற்றமடைந்தார்கள். ஆனாலும் அவர்களுக்கே உரிய துறுதுறுப்போடு என்ன ஆராய்ச்சி, எங்கே நடக்கும், கூட எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள். அந்த ஆராய்ச்சியால் என்ன பயன் என்று வினவத் தொடங்கினர். அவரும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னார். அவருக்குத்தான் கேள்வி கேட்கிற குழந்தைகளை மிகவும் பிடிக்குமே. “ஊருக்குப் போறதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு பரிசு தரப் போறேன்” என்று சொன்ன அவர் ஒரு பெட்டியைக் கொடுத்தார். ஆவலோடு திறந்து பார்த்தார்கள். அது ஒரு சிறு வாகனம் போல இருந்த எந்திரம். “இதிலே உட்கார்ந்து நீங்க போக விரும்பும் இடத்தைச் சொன்னா இதுவே உங்களை அங்கே கொண்டுபோய் விட்டுட்டு, நீங்க சொல்றப்பத் திரும்ப வும் கொண்டு வந்துடும். ஒரே ஒரு தடவை தான். இதிலே போய்ட்டு வர முடியும். அத னால், மிக மிக முக்கியமான இடத்தை முடிவு செய்து இதுகிட்ட சொல்லுங்க” என்று கூறினார்.
அம்முவும் பப்புவும் வியப்போடு அதைப் பார்த்துக் கொண்டிருந்த போது அவர் இருவருடனும் கைகுலுக்கிவிட்டு விடை பெற்றார். இரவு முழுக்க ஆர்வத்தோடு காத்தி ருந்தவர்கள் காலையில் பயணத்துக்குத் தயாரானார்கள். எந்திரத்தில் ஏறி அமர்ந் தார்கள். “உலகத்திலேயே ரொம்ப அழ கான, எல்லா இயற்கை வளங்களும் உள்ள, அன்பான பலவகை மனுசங்களும் வாழுற, வரலாற்றுச் சிறப்புள்ள நாட்டுக்கு எங்களைக் கொண்டு போ மாய வாகனமே” என்று சொன்னார்கள். எந்திரம் அசையவில்லை. மறுபடி சொன்னார்கள். இப்போதும் அது நகர வில்லை. பல தடவை முயன்றும் பலிக்க வில்லை. “விஞ்ஞானி ஒரு தடவைதான் பயன்படுத்த முடியும்னு சொன்னார். ஆனா இது ஒரு தடவை கூட அசையவில்லையே” என்றாள் அம்மு. “ஒருவேளை விஞ்ஞானி சும்மா நம்மளக் கலாய்க்கிறதுக்காகச் சொல்லி யிருப்பாரோ” என்றான் பப்பு. இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே வந்தார்கள் அம்மாவும் அப்பா வும். அவர்களிடம் விஞ்ஞானி பற்றி ஏற்கெ னவே சொல்லியிருக்கிறார்கள்..
“விஞ்ஞானி சும்மா விளையாட்டாச் சொல்லிட்டாராப்பா” என்று ஏமாற்றத்தோடு கேட்டான் பப்பு. “நீங்கள் இந்த மெஷினிடம் எங்கே போகணும்னு சொன்னீங்க” என்று கேட்டார் அப்பா. அதை அப்படியே திரும்பவும் சொன்னாள் அம்மு. “எந்திரம் சரியாத்தான் செயல்பட்டி ருக்கு” என்றார் அம்மா. வியப்போடு தன் முகத்தைப் பார்த்த குழந்தைகளிடமும் அப்பாவிடமும் அம்மா சொன்னார்: “ஆமா. உலகத்தில ரொம்ப அழகான, எல்லா இயற்கை வளங்களும் உள்ள, அன்பான பலவகை மனிதர்கள் வாழுற, வரலாற்றுச் சிறப்புள்ள நாடு நம்ம நாடுதான். அதனாலதான் எந்திரம் வேறே எங்கேயும் போகவில்லை.” பிள்ளைகள் மன நிறைவோடு மாய எந்திரத்தை அணைத்துக்கொண்டார்கள், விஞ்ஞானியை நினைத்துக்கொண்டார் கள்.