tamilnadu

img

புத்தக வாசிப்பு மரணத்தின் வாசலில் நிற்பவனைக் கூட வாழவைக்கும் ​​​​​​​கம்பம் செல்வேந்திரன் பேட்டி

 மதுரை, செப்.8- புத்தக வாசிப்பு மரணத்தின் வாச லில் நிற்பவனைக் கூட வாழவைக் கும் என திமுக முன்னாள் மாநி லங்களவை உறுப்பினர் கம்பம் செல்வேந்திரன் கூறினார். மதுரையில் நடைபெறும் 14-ஆவது புத்தகத் திருவிழாவிற்க்கு வந்து கம்பம் செல்வேந்திரன் பாரதி புத்தகலயத்தில் புத்தகங்கள் வாங்கினார். அப்போது அவர் தீக்க திருக்கு அளித்த பேட்டி:- ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் புத்தகத் திருவிழா விற்கு வருவதற்கு என்னுடைய வாசிப்பின் நேசிப்பே காரணம். ஊட கங்கள், செல்லிடப் பேசிகள், சமூக வலைதளங்கள் இருந்தாலும் புத்தக வாசிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. சிலர் பொழுதுபோக் கிற்காக வசிக்கிறார்கள். சிலர் இலக்கிய தேடலுக்காக வசிக்கிறார் கள். சிலர் வரலாற்று தேடலுக்காக வாசிக்கிறார்கள். ரசிகமணி டி.கே.சிதம்பரம் ஒரு முறை கூறினார் எனக்கு காய்ச்சல் வந்தபோது கம்ப இராமாய ணத்தை வாசித்தேன். காய்ச்சல் போய்விட்டது என்றார். வாசிப்பு ஒருவருக்கு மருந்தாக மாறுகிறது. இந்தச் சமூகம் மேம்படுவதற்கு வாசிப்பு மிகப் பெரும் பங்காற்றி வருகிறது.  அண்மையில் ஒரு சிறைச்சாலை யில் தூக்குத் தண்டனை கைதிகள் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கி னார்கள். சில நாட்கள் கழித்து கவி தைகள் எழுதினார்கள். அப்போது அந்த குற்றவாளிகளை கொலைக் குற்றத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தில் மேல் முறையீடு செய்யப்பட் டது. அப்போது அந்த குற்றவாளி களுக்கு ஆதாரமாக வழக்குப்பற் றிய ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை அவர்கள் எழு திய கவிதைகளை நீதிபதி முன்பு வழக்கறிஞர் சமர்ப்பிக்கிறார். இதை யடுத்து நீதிபதி குற்றவாளிகளின் கவிதைகளைப் படித்துவிட்டு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கிறார். அப்படியென்றால் புத்தக வாசிப்பு மரணத்தின் வாசலில் நிற்பவனைக் கூட வாழ வைக்கிறது. வாசிப்புப் பழக்கத்தை ஒவ்வொருவரும் மேற் கொள்ள வேண்டும். அது நம்மை வாழவைக்கப் பயன்படும் என்பதை உணர்ந்து வாசிக்க வேண்டும் என்றார்.