tamilnadu

img

மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு சிஐடியு முயற்சியால் போனஸ்!

சென்னை, அக். 30- மெட்ரோ ரயிலில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 300க்கு மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு அரசு போனஸ் வழங்கி வந்தாலும், மெட்ரோ ரயில் நிறுவன ஊழி யர்களுக்கு கடந்தாண்டு வரை போனஸ் வழங்கப்படவில்லை.   இந்நிலையில், மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் எம்ப்ளாயீஸ் யூனியன் (சிஐடியு) தலைவர் அ.சவுந்தரராசன் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பினார். இதனையடுத்து முதன் முறையாக மெட்ரோ ரயில் நிர்வாகம் நிரந்தர ஊழியர்களுக்கு ரூ.15 ஆயிரம் போனஸ் அறிவித்துள்ளது. இதன்படி, 2023 - 2024 நிதி யாண்டில் குறைந்தது ஆறு மாதம் பணியாற்றிய தொழிலாளர்கள் போனஸ் பெற தகுதியானவர்கள். 2023 ஏப்ரல் முதல் மார்ச் 2024 வரை ஒரு நிதியாண்டு  முழுமையாக பணியாற்றிய ஊழியர்களுக்கு முழு தொகையும் போனசாக கிடைக்கும். 6 மாதங்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு விகிதாச்சார முறையில் போனஸ்  வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.