tamilnadu

தில்லி சிஆர்பிஎப் பள்ளி அருகே குண்டுவெடிப்பு?

தில்லி ரோகினி பகுதியில் உள்ள சிஆர்பிஎப் பள்ளிக்கு அருகே ஞாயிற்று க்கிழமை காலை குண்டுவெடிப்பு நிகராக மர்ம பொருள் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. எனினும் இந்த வெடிப்புச் சம்பவத்தால் பள்ளியின் சுவர் மற்றும் அருகில் உள்ள கடை, கார் சேதமடைந்தது. இந்தச் சம்பவத்தை அடுத்து, தீயணைப்பு வண்டிகள், வெடி குண்டு நிபுணர்கள், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். முதல் கட்ட ஆய்வில், வெடிப்புச் சம்பவத் துக்கு காரணமான பொருள் பெட்ரோல் குண்டாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. எனினும், முழு அறிக்கை யும் கிடைத்த பின்னரே அனைத்து விபரங்களும் தெரியவரும் என்று தடயவியல் துறை தெரிவித்துள்ளது.