லா பாஸ்,அக்.28- பொலிவியா இடதுசாரித்தலை வரும் முன்னாள் ஜனாதிபதியுமான ஈவோ மொரேல்ஸ் மீது ஞாயிற்றுக் கிழமையன்று கொலை முயற்சி நடந்துள்ளது. காரில் பயணித்துக் கொண்டு இருந்த போது மர்ம நபர்களால் 14 முறை அவரது கார் கண்ணாடிகள் வழியே சுடப்பட்டது. ஓட்டுநரின் சாமர்த்தி யத்தாலும் குண்டு துளைக்காத கண்ணாடி என்ப தாலும் மொரேல்ஸ் உயிர் தப்பி யுள்ளார். இந்த தாக்குதலில் அவரது கார் ஓட்டுநருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்தான காணொலி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.