tamilnadu

img

நில மாபியாக்களுக்கு துணைபோகும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம்

திருநெல்வேலி, அக்.27- திருநெல்வேலி மாவட்டம் சேர்ந்தனார்குளம் கிராமத்தில் உள்ள நிலங்களை அபகரிக்க முயலும் நில மாபியாக்களுக்கு துணை  போகும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வியாழ னன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது.  திருநெல்வேலி மாவட்டம் நாங்கு நேரி தாலுகா பருத்திப்பாடு பஞ்சா யத்துக்குட்பட்ட சேர்ந்தனார்குளம் கிராமத்தில் 60 வீடுகள் உள்ளன. 1960-லிருந்து இந்த கிராமத்தில் அவர் கள் குடியிருந்து வருகின்றனர். மேலும் 1973ல் இந்த இடங்கள் கிராம மக்களுக்கு ஒதுக்கப்பட்டது.  இந்த நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு நில அபகரிப்பு கும்பல் ஒன்று சேர்ந்தனார்குளம் மக்கள் வசித்து வரும் இடத்தை தங்களுக்கு சொந்தம் என்றும் அந்த மக்கள் ஊரை காலி செய்ய வேண்டும் என்றும் அடியாட்களை வைத்து மிரட்டி, ஒரு வீட்டை இடித்துள்ளனர்.   மேலும் ஊரில் உள்ள குடிநீர் கிணறு, பம்ப்செட், மின்சார இணைப்பு பெட்டி ஆகியவற்றை கம்பிவேலியால் அடைத்துள்ளனர். இதேபோல் அரசு செலவில் கட்டப்பட்ட கழிப்பறை, தார் சாலை ஆகியவை கம்பி வேலி போட்டு மறைக்கப்பட்டதோடு, தார்சாலை முழுவதும் பெயர்த்து எறியப் பட்டுள்ளது. கோயிலுக்கு செல்லும் பாதை, பட்டியலின மக்கள் பயன் படுத்தக்கூடிய சுடுகாடு ஆகிய வற்றிற்கும் கம்பி வேலி போட்டு அடைத்துள்ளனர். பல வீடுகளின் சுவர்களை ஒட்டி கம்பி வேலி போடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து காவல்துறை, வருவாய்த் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சேர்ந்தனார் குளம் கிராம மக்களும், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் 4 முறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, மனு கொடுத்துள்ளனர். போராட்டமும் நடத்தியுள்ளனர். ஆனால், காவல் துறையோ, மாவட்ட நிர்வாகமோ, வருவாய்த்துறையோ எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை.  இந்நிலையில், அக்டோபர் 19 அன்று மாவட்ட ஆட்சியரை நேரடி யாக சந்தித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலத் தலைவர்  பெ.சண்முகம், மாநிலப் பொரு ளாளர் கே.பி.பெருமாள், மார்க்சிஸ்ட்  கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செய லாளர் க.ஸ்ரீராம் ஆகியோர் ஊர் மக்க ளுடன் சென்று மனு கொடுத்தனர்.  ஆனால், மாவட்ட ஆட்சியர் அந்த நில மாபியாக்களிடம் பட்டா உள்ளது என்று கூறுகிறார். 2013 வரை இல்லாத பட்டா திடீரென்று 2013 இல் முளைத்தது எப்படி என்ற கேள்வி க்கு அவரிடம் பதில் இல்லை. 

கருப்புக் கொடி

இந்நிலையில், அக்டோபர் 26 வியாழனன்று அந்த கிராமத்தின் எல்லா வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு, ஊருக்குச் செல்லும் வழியெல்லாம் கருப்புக் கொடி கட்டப்பட்டுள்ளது. பொதுஇடத்தில் கருப்புக் கொடியை சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனக ராஜ், மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம்,  மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள்  ஆர்.எஸ்.துரைராஜ், சுடலை ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள்  கு.பழனி, முருகன் ஆகியோர் ஏற்றி  வைத்தனர்.  மேலும் சட்டவிரோதமாக போடப்பட்ட முள் வேலியை அகற்றும் இயக்கத்தை நவம்பர் 10-ஆம் தேதி  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்தவுள்ளது. அதற்குள் மாவட்ட நிர்வாகம் வேலிகளை அகற்றவில்லை எனில் மார்க்சிஸ்ட் கட்சி மக்களோடு இணைந்து வேலிகளை அகற்றும் என மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் கூறினார்.  “மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அந்த முள்வேலிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும். பட்டியலின மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டை அடைத்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.  இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, காவல் துறையின் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மோசடியாக கொடுக்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.  60 ஆண்டு காலமாக குடியிருக் கும் மக்களுக்கு பட்டா வழங்கப்பட வேண்டும். இதை மாவட்ட ஆட்சி யர் நிறைவேற்றுவதற்கு முன் வரவேண்டும்” என்றும் கனகராஜ் வலியுறுத்தினார்.