தமிழகத்தின் கல்வி உரிமையை பறித்து பாஜக தான் அரசியல் செய்கிறது!
மாணவர்களின் நலனுக்கான கல்வியை அரசியலாக்க வேண் டாம்” என்று முதல்வர் மு.க. ஸ்டா லினுக்கு, ஒன்றிய அமைச்சர் தர்மே ந்திர பிரதான் கடிதம் எழுதியிருந்த நிலையில், “தமிழர்களின் கல்வி உரிமையில் பாஜக தான் அரசியல் செய்கிறது” என்று துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அலகாபாத்தில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் போது பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத வரை தமிழகத்திற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதியை விடு விக்க மாட்டோம்’ என ஆணவத்து டன் கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்தது. அனைத்து அர சியல் கட்சிகளும் கண்டித்ததுடன், திமுக தோழமைக் கட்சிகள் போராட்டமும் நடத்தின. அத்துடன், பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “தமிழ்நாட்டின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷ அபியான்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படவேண்டிய ரூ. 2,152 கோடி நிதியினை ஒன்றிய அரசு உட னடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி யிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அதில், “பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. 1968-இல் தொடங்கி இந்திய கல்வித் திட்டத்தின் முது கெலும்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது. மும்மொழிக் கொள்கை யை இதுவரை முறையாக நடை முறைப்படுத்தாதது துரதிர்ஷ்டவச மானது. சமூகம் மற்றும் கல்வியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. பல மாற்றங்களுக்கான போராட்டங்களை தமிழ்நாடு முன் னெடுத்துள்ளது.
புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும். ‘சமக்ர சிக்ஷ அபியான்’ மற்றும் பி.எம்.ஸ்ரீ. திட்டத்தின் கீழ் தமிழக அரசு இழப்பது, ரூ. 2,500 கோடி அல்ல; ரூ. 5,000 கோடி! மாணவர்களின் நல னுக்கான கல்வியை அரசிய லாக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார். இந்நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடி தத்தில் முன்வைத்த குற்றச்சாட்டு க்கு துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதில், “தமிழ்நாட்டு மக்களுக் கான உரிமையைத் தான் கேட்கி றோம். மாணவர்களுக்கு வரவேண் டிய கல்வித் தொகையான 2,152 கோடி ரூபாயை கேட்கிறோம். வருடா வருடம் கொடுக்கும் தொகையைத் தான் கேட்கிறோம். ஆனால், இம்முறை நிதி வேண்டுமானால், புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். அதுமட்டுமில்லாமல், மும் மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று கூறுகிறார்கள். தமிழ்நாடு எப்போதும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகத் தான் இருந்துள்ளது. மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெளிவாக சொல்லிவிட்டோம். இதில் அரசியல் செய்ய என்ன இருக்கிறது? மொழிக்காக பல உயிர்களைக் கொடுத்த மாநிலம் தமிழ்நாடு. கல்வி என்பது தமிழர்களின் உரிமை. எனவே, யார் அரசியல் செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.
கலந்து ஆலோசிக்காத திட்டத்தை ஏற்குமாறு கட்டாயப்படுத்துவதா?
பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டத்தின் மூலம் புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு திணிப்பதை தெரிந்து கொண்டோம். மும்மொழிக் கொள்கை தொடர்பான ஷரத்தும், 3,5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முறை உள்ளிட்டவைகளும் அதில் இடம்பெற்றிருந்தன. இது மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும் எனக் கூறினோம். தமிழகத்தில் 2021 ஆட்சி மாற்றத்தின் போது 16 சதவிகிதமாக இருந்த இடைநிற்றலை, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு 5 சதவிகிதமாக கொண்டு வந்திருக்கிறோம். முதல்வர், துணை முதல்வர், தோழமைக் கட்சிகள், மக்கள் கோலமிட்டு ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். மீண்டும் ஒரு மொழிப்போரைக் கொண்டுவரக்கூடாது என்ற வகையில், தமிழக அரசின் கண்டனத்தை தெரிவித்தோம். இன்றைக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். இருமொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டு தமிழகத்தில் கல்வி கற்றுள்ள மாணவர்கள், பல்வேறு துறைகளில் சாதித்து உயர்ந்து நிற்கிறார்கள். இஸ்ரோ உள்பட, மருத்துவம், பொறியியல் என இன்று சாதித்தவர்கள் அனைவருமே இருமொழியை ஏற்று படித்தவர்கள்தான். புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும் முன்பாக, இந்தியாவில் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலத்தின் சார்பில் ஒரு பிரதிநிதியை அழைத்து கலந்தாலோசித்திருந்தால், சரியாக இருந்திருக்கும். ஆனால், இதை எதையும் செய்யாமல், அவர்களாகவே ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளனர். பிறகு கண்டனம் வரும்போது, ஒன்றிய அரசு இறங்கி வந்து கடிதம் எழுதுவது, தூண்டில் போட்டுவிட்டு அதில் மீன் ஏதாவது சிக்காதா? என்று பார்ப்பது போல் இருக்கிறது” என்று அவர் கூறினார்.