ஈரோடு, அக்.21- தமிழகத்தில் யாரும் கூட்டணி சேர தயா ரில்லை என்றானவுடன் அரசியல் ஆதா யத்திற்காக பாஜகவும், ஆர்எஸ்எஸ்-சும் பதற்றமான சூழலை உருவாக்க முயல் கின்றன என கே. பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் ஈரோடு வி.பி. சிந்தன் நினை வகத்தில் சனிக்கிழமையன்று செய்தியா ளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 60-ஆவது ஆண்டு அக்டோபர் 30 முதல் துவங்குகிறது. அந்த நிகழ்வை ஒட்டி தமிழ் நாடு முழுவதும் 29, 30 தேதிகளில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை யான கோட்பாடுகளை விளக்கியும், மோடி அரசாங்கத்தினுடைய மக்கள் விரோத, மத வெறுப்பு அரசியலை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வகையிலும் தமிழகம் முழுவதும் கருத்தரங்கம், ஆர்ப்பாட்டங் கள் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை நடத்த தீர்மானித்திருக்கிறோம். ஒன்றிய ஆட்சியதிகாரத்தில் உள்ள மோடி அரசாங்கம் தனது கடைசிக் காலத்தை எட்டியிருக்கும் சூழலில் மக்கள் மத்தியில் வெறுப்பு அரசியலை உருவாக்கி, சிறு பான்மை மக்கள் மீது தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்க னவே சிறுபான்மை மக்களுக்கு வழங் கப்பட்டிருக்கிற உதவித்தொகை உள்ளிட்ட வற்றை நிறுத்தி அறிவிப்பு வெளியிட் டுள்ளனர். சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பு அரசி யலை செய்யும் அதே நேரத்தில், பெரும் பான்மை மக்களின் வாழ்விற்கும் பெரிதாக ஒன்றும் செய்திடவில்லை. இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கிற இந்து மக்கள்தான் பாஜக ஆட்சியின் மோசமான கொள்கையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, ஈரோடு, திருப்பூர், கோயம் புத்தூர் போன்ற மாவட்டங்களில் ஜவுளி தொழில் பெரிய நெருக்கடிக்கு ஆளாகி யிருக்கிறது. அதற்கு அடிப்படையான கார ணம் மோடி அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கைதான். பருத்தியை அரசாங்கமே கொள்முதல் செய்வதைக் கைவிட்டதன் விளைவுதான் ஜவுளித் தொழிலில் புதிய நெருக்கடி ஏற்படக் காரணம். இதுபோல பெரும்பான்மையான மக்களுக்கு விரோத மாக, கார்ப்பரேட் முதலாளிகளின் எல்லா விதமான நடவடிக்கைகளையும் ஆத ரித்துக் கொண்டிருக்கிற மோடி அரசாங் கத்தை எதிர்த்த எங்களின் கிளர்ச்சிப் பிரச்சா ரத்தை இந்த மாத கடைசியில் நடத்த இருக்கிறோம். கடந்த 15, 20 நாட்களாக ஈரோடு மாவட் டம் பதற்றமான சூழலில் இருந்தது, தமிழ் நாடே கவலை கொள்ளும் நிலைமையா கும். காலங்காலமாக ஈரோடு மாவட்டம் உள்ளிட்ட மேற்கு மண்டலம் அமைதியாக, மக்கள் சகோதரத்துவத்தோடு வாழக் கூடிய பண்புள்ள பகுதியாகும். இதர மாவட் டங்களில் சில நேரங்களில் சாதி மோதல், கல வரம் நடக்கும். ஆனால் மேற்கு மண்ட லத்தில் அப்படி எதுவும் இல்லாமல் பரஸ்ப ரம் சகோதரத்துவத்தோடு வாழும் பகுதி மேற்கு மண்டலம். சமீப காலத்தில் இந்த மேற்கு மண்டலத்தை தங்களின் கோட்டை யாக மாற்றிக் காட்ட வேண்டும் என பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் சாதாரண பிரச்சனையைக் கூட ஊதிப் பெரிதாக்கி பதற்றமான சூழலை உருவாக்கி வருவது கண்டனத்திற்கு உரி யது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே கிறித்தவ மதத்தைச் சார்ந்தவர் அவ ருடைய வீட்டில் வழிபாடு நடத்துகிறார்.
எல்லாருக்கும் அவரவர் வழிபாட்டை செய்ய உரிமை உள்ளது. அதை யாரும் தடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள், அவர் வீட்டில் புகுந்து, பெண்கள் உள்ளிட்டோரைத் தாக்கு கின்றனர். அதை எதிர்த்து பலர் காவல்துறை யினரை சந்தித்து முறையிடுகின்றனர். காவல்துறை அன்றே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் பிரச்சனை பெரிதாக வந்திருக்காது. மாறாக, பிரச்சனை மோசமடைவதற்கு காவல்துறையினரின் தாமதமும் ஒரு காரணமாகி விட்டது. இந்நிலையில் கிறித்தவ முன்னணியின் பெயரில் சரவணன் (எ) ஜோசப் என்பவர் தாறுமாறாக, சென்னிமலையை கல்வாரி மலை யாக மாற்றுவேன் என பேசியுள்ளார். கிறித்தவரின் வீட்டில் இந்து முன்னணியினர் சென்று தாக்கியது எவ்வளவு தவறோ, அதற்கு நிகரான தவறு கிறித்தவ முன்னணி என்கிற பெயரில் சரவணன் (எ) ஜோசப் பேசிய தும் ஆகும். இந்து மக்களை விமர்சிக்கும் வகையில் அவர் பேசியிருப்பதும் வன்மையான கண்டனத்திற்குரியது. இவ்வாறு சில தனி நபர்கள் வாய்க்கு வந்ததைப் பேசி சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கி விடுகின்றனர். சரவணன் (எ) ஜோசப்பிற்கு யார் இந்த அளவிற்கு அதிகாரம் கொடுத்தது? அதிலும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, அன்றே அவரைக் கைது செய்திருக்கலாம். அதிலும் காவல்துறை தாமதித்துள்ளது.
இதைப் பயன்படுத்தி, சென்னிமலையைக் கைப்பற்றப் போகிறார்கள். முருகன் கையில் வேலுக்குப் பதிலாக சிலுவையைக் கொடுக்கப் போகிறார்கள் என இந்து முன்னணி பிரச்சாரம் செய்திருப்பது, ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது, சாதாரண மக்களின் இறை உணர்வைத் தூண்டி விட்டு அரசியல் லாபம் தேடும் முயற்சியாகும். யாரோ சில நபர்கள் செய்வதற்காக ஒட்டுமொத்த மக்களையும் இறக்குவதென ஆரம்பித்தால், அமைதி, பரஸ்பர நம்பிக்கை இருக்காது. தவறான முறையில் செயல்படுவார்க ளேயானால், அப்படிப்பட்ட தனிநபர்களைக் கண்டிக்க வேண்டும். வழக்குப் பதிவுசெய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக-வுடன் உறவு இல்லை என்று அதிமுக அறிவித்த பிறகு, மக்களிடம் மதப் பதற்றத்தை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் லாபம் அடையலாம் என்று கணக்குப் போட்டு சில வேகமான நடவடிக்கைகளில் ஆர்எஸ்எஸ்-சும், பாஜகவும் இறங்கியுள்ளன. சாதாரண மக்களை, ஏழை, எளிய, அப்பாவி மக்களின் மத நம்பிக்கையை, மதவெறியாக தூண்டி விட்டு பதற்றமான சூழலை உரு வாக்கப் பார்க்கின்றன. சாதாரணமாக ஒன்றிய அரசை எதிர்த்து நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு காவல்துறையி னர் ஏராளமான நிபந்தனைகள் விதிக்கின்றனர். ஆனால், பகிரங்கமாக மக்கள் மத்தியில் மோதல் போக்கை உருவாக்கும் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மீது ஏனோ நடவ டிக்கை எடுக்க மறுக்கின்றனர். மக்களை கோப மூட்டும் நடவடிக்கைகளை அனுமதிக்கின்றனர். எனவே இந்த மாதிரியான போக்குகளுக்கு தமிழக அரசும், காவல்துறையும் இடமளிக்கக் கூடாது.
ஈரோடு மக்களிடையே தேவையற்ற பதற்றத்தையும், அமைதியற்ற சூழலை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடும் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் திட்டங்களுக்கு பலி யாகாமல், அனைத்துத் தரப்பு மக்களும் சகோதரத்துவத்தோடு வாழ வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இதையொட்டி, மதச்சார்பற்ற கட்சிகளின், இயக்கங்களின் தலைவர்களை இணைத்து ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சிக்கு அனைத்து மதத்தினரும், மக்களும் பேராதரவு அளிக்க வேண்டும். அமைதியான சூழலைப் பாதுகாக்க நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும். ஒரு சிறிய சம்பவத்தில் வன்முறை ஏற்பட்டால் அந்த தீயை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அதிகமான வலியையும், வேதனை யையும் அனுபவிக்கக் கூடிய நிலைமை ஏற்படும். அப்படிப்பட்ட சூழல் வர வேண்டும் என்றுதான் ஆர்எஸ்எஸ், இந்துத்துவா சக்திகள் விரும்புகின்றன. அதற்கு யாரும் பலியாகிவிடக் கூடாது. இதில், எல்லா மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று செயல்படும் சில தனி நபர்களை சாதியைச் சொல்லி, தாக்குவோம், வீடுகளில் நுழைவோம் என்று சமூக வலைதள பதிவுகளை செய்வது விரும்பத்தக்கதல்ல. காவல்துறை இதுபோன்ற சமூக வலைதளப் பதிவுகளை முறையாகக் கண்காணிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை அனுமதிப்பதுதான் வன்முறை உருவா வதற்கான களமாக மாறுகிறது. எனவே காவல்துறை மேலும் விழிப்பாக செயல்பட வேண்டும். பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மாவட்டச் செயலாளர் ஆர். ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப. மாரிமுத்து, ஜி. பழனிசாமி, ஆர். கோமதி, சி. முரு கேசன் மற்றும் மூத்த தலைவர் கே. துரைராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.