விமர்சனங்களை ஏற்காத பாஜக
சென்னை: விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத அரசாக ஒன்றிய பாஜக அரசு உள்ளது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எப்படியாவது மக்களிடையே பிளவு ஏற்படுத்த முயல் கிறார்கள். பிளவுவாத அரசியலை முன்னெடுக்க நினைத் தால் வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
7 ஆவது நாளாக வேலை நிறுத்தம்
புதுச்சேரி: காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தது. இதனை கண்டித்து காரைக்கால் மீனவர் கள் ஒருவாரமாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உட னடியாக விடுதலை செய்ய வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உரிய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகம் 3 ஆவது இடம்
சென்னை: ஒன்றிய அரசின் ஊராட்சிகளின் அதி காரப் பகிர்வு குறியீடு அறிக்கையில், கட்டமைப்பு, செயல்பாடு கள், நிதி, பிரதிநிதிகள், திறன் மேம்பாடு, பொறுப்புடைமை ஆகியவற்றின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக தமிழகம் 3 ஆவது இடத்தையும், செயல்பாடுகள் குறியீட்டில் முத லிடத்தையும் பிடித்துள்ளது.
கல்வியில் அரசியல் செய்யாதீர்கள்!
திருச்சி: தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால்தான் நிதி விடுவிக்கப்படும். ஏற்காத பட்சத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க சட்டத்தில் இட மில்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளார். ‘கல்வியில் அரசியல் செய்யாதீர்கள்’ என ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டு கோள் விடுத்துள்ளார்.
‘தீயை தீண்டுவதற்குச் சமம்’
சென்னை: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டா லின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை நாம் அரசியலால் தூண்டப்பட்டு (Politically Motivated) பேசுவதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா? தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்குச் சமம். சுதந்திரத்துக்குப் பிறகான தமிழ்நாட்டின் வரலாற்றைப் படித்தாலே இது உங்களுக்குப் புரியும்” என குறிப்பிட்டு உள்ளார்.
சுங்க வரி உண்டு!
சென்னை: வெளிநாட்டில் இருந்து வருவோர், தங்க நகை அணிந்து வந்தால் சுங்க வரி உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருவேறு வழக்கு களில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவை எதிர்த்து மேல்முறை யீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர்நீதி மன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.
முக்கிய பொறுப்பு அளிப்பு
சென்னை: கடந்த மாதம் திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜ் மகள் திவ்யாவிற்கு, திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் இணைந்த ஒரு மாதத்திற்கு உள்ளாக அவருக்கு முக்கிய பொறுப்பை திமுக தலைமை அளித்துள்ளது.
முட்டாள்தனமான பேச்சு
புதுக்கோட்டை: அண்ணா அறிவாலயத்தின் செங்கல் களை ஒவ்வொன்றாக பிரித்து எடுப்பேன் என்கிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. முட்டாள்த்தனமான பேச்சு இது. சட்டப்படி கட்டப்பட்ட கட்டடம் அது. யார் வந்தாலும் செங்கல்லை எடுக்க முடியாது என புதுக்கோட்டையில் சனிக் கிழமை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்