பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்பொழுதெல்லாம் தமிழையும் மாநில மக்களையும் பாராட்டுகிறார். ஆனால் அவரது கட்சித் தலைவர்கள் தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்துவதில் இன்பம் காண்கின்றனர். “ஆயிரம் ரூபாய் வாங்கும் தமிழ்நாட்டு பெண்கள் பிச்சைக்காரி கள்” - இது குஷ்பூவின் குரூரம். “வெள்ள பாதிப்புகளுக்காக நிவாரண தொகை வாங்கும் மக்கள் பிச்சைக்காரர்கள்” - இது நிர்மலா சீதாராமனின் வன்மம். “தமிழர்கள் தீவிரவாதிகள்” - இது ஒன்றிய அமைச்சர் ஷோபாவின் நஞ்சு தோய்ந்த கூற்று. கோவையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு குண்டுவெடிப்பில் கொல்லப் பட்டவர்களுக்கு பிரதமர் மோடி இப்போது திடீரென்று அஞ்சலி செலுத்துகிறார். பழைய காயங்களை கிளறிவிடுகிறார். தமிழ்நாட்டு மக்களை இழிவு படுத்துவதும் வாக்கு அரசியலுக்காக ஒற்றுமையை சீர்குலைப்பதும்தான் பா.ஜ.க.வின் நோக்கமாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமை யை பாதுகாக்கவும் தமிழ்நாட்டின் மத ஒற்றுமையை பேணி வளர்க்கவும் பாஜக துடைத்தெறியப்படுவது காலத்தின் தேவை!