tamilnadu

img

வாக்குச்சாவடியில் ஹிஜாப்பை அகற்ற சொன்ன பாஜக முகவர் வெளியேற்றம்

மதுரையில் வாக்களிக்க வந்த பெண்ணை பாஜக முகவர் ஹிஜாப்பை அகற்றுமாறு கூறியதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. 
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் 8வது வார்டில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப்பை அகற்றும்படி பாஜக முகவர் கூறினார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதற்கு பிற கட்சி முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பாஜக முகவர் கிரிராஜன் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி பழனிக்குமார் கூறியதாவது, "இந்தியா மத சார்பற்ற நாடு, மத அடையாளங்களுடன் வாக்கு பதிவு மையத்திற்கு வரக்கூடாது என எந்த நிபந்தனையும் இல்லை" என தெரிவித்துள்ளார்.