முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஜூலை 19 - ‘இந்தியா வெல்லும்; அதை 2024 சொல்லும்’ என திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். இதுதொடர்பாக திமுக தொண்டர் களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்ப தாவது: 2024-இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றுபட்ட இந்தியாவையும் அதன் ஜனநாயகத் தன்மையைக் காத்திடவும் பெங்களூரு நகரில் உண்மையான இந்தியா உருவாகியிருக்கிறது. இத்தனை நாள் இந்தியாவின் தேச பக்திக்கு தாங்கள் மட்டுமே ஒட்டு மொத்த குத்தகைதாரர்கள் போல செயல்பட்டு வந்த பாஜக-வினரும் அதன் பரிவாரத்தினரும், ஜனநாயக இயக்கங்களின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்ற பெயர் சூட்டியதும், அந்தப் பெயரை உச்சரிப்பதற்கே தயக்கம் காட்டியதன் மூலம், அவர்களின் போலி தேசபக்தி முக மூடி கழன்று தொங்குவதைக் காண முடிகிறது. இந்தியா என்ற சொல் இப்போது அவர்களுக்குப் பிடிக்காத சொல் லாக ஆகிவிட்டது. இந்தியாவைப் பிடிக்காவிட்டால் ‘பாகிஸ்தானுக்குப் போ’ என மதவாத சிந்தனையுடன் பேசிய பாஜக-வினர், இப்போது எந்த நாட்டுக்கு ‘விசா’ வாங்கப் போகிறார் கள் என்று தெரியவில்லை. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியி லிருந்து பாஜக-வுக்கும் -
அதனு டன் கூட்டு சேர்ந்து நாட்டின் ஒருமைப் பாட்டைச் சிதைப்பவர்களுக்கும் ‘விசா’ வழங்கி வெளியே அனுப்பிட மக்கள் ஆயத்தமாகி விட்டார்கள். அதனை மறைக்கத்தான் அமலாக்கத் துறை தொடங்கி அத்தனை அமைப்பு களையும் ஏவி அச்சுறுத்தும் வேலை கள் நடக்கின்றன. ‘இந்தியா’வில் உள்ள யாரும் இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை. உண்மையான இந்தி யாவின் எதிரிகள் யார் என்பதை அடை யாளம் காட்ட வேண்டியதே நமது முதன்மையான பணி. இந்தியாவின் எதிரிகளான மதவாத - ஜனநாயக விரோத - மாநில உரிமைகளைப் பறிக் கும் சக்திகளை. உடன்பிறப்புகளான நீங்கள் அனைவரும் அடையாளம் காண்பீர்! மக்களிடம் அடையாளப் படுத்துவீர்! நாற்பதும் நமதே - நாடும் நமதே என்ற இலக்குடன் இப்போதே ஆயத்தமாவீர்! இவ்வாறு மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.