tamilnadu

மலையாள திரையில் மீண்டும் பாவனா: இயக்குநர் ஆஷிக் அபு

நடிகை பாவனா 5 ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் மலையாள சினிமாவுக்கு வருவதாகவும், அதற் கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இயக்குநர் ஆஷிக் அபு தெரி வித்துள்ளார். இதுகுறித்து ஆஷிக் அபு மேலும் கூறுகையில், நாங்கள் நடத்திய சினிமா விவாதங்களில் அடிக்கடி பாவனாவின்  பெயர் வருவதுண்டு. இது குறித்து பாவ னாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்  ஒரு கதை கேட்டார். பிடித்திருந்தது. பாவனாவிடம் மீண்டும் வரும்படி இதற்கு முன்பு பலமுறை கேட்கப்பட் டது. ஆனால், மன அழுத்தம் அவரை பின்னுக்கு இழுத்ததாக ஆஷிக் அபு கூறினார். பர்கா தத் அளித்த பேட்டி யில், மீண்டும் மலையாளத் திரைக்கு வருவேன் என்று பாவனா கூறியுள்ள நிலையில் இந்த தகவலை ஆஷிக் தெரிவித்துள்ளார்.