tamilnadu

img

உரங்கள் இறக்குமதி நிலை என்ன?

பி.ஆர். நடராஜன் கேள்விக்கு அமைச்சர் பதில்

புதுதில்லி, டிச.12- விவசாயிகளின் தேவைகளை எதிர்கொள்ளும் விதத்தில் ஒழுங்கான  முறையில் உரங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பி னர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை யமைச்சர் பகவந்த் கௌபா பதி லளித்தார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர்.நட ராஜன், நாட்டிலுள்ள விவசாயி களுக்குத் தேவையான உரத்தேவை கள் பற்றிய புள்ளிவிபரங்கள்/தரவு கள் ஏதேனும் அரசிடம் உள்ளதா என்றும், ஆம் எனில் அதன் விவரங் கள் என்ன என்றும் கேட்டிருந்தார்.

மேலும் நாட்டில் உரத்தேவை பற்றாக்குறையை எதிர்கொள்ள, உர இறக்குமதி திட்டங்கள் ஏதேனும் அர சிடம் உள்ளதா என்றும்கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் பகவந்த் கௌபா கூறியதாவது: 2023-24ஆம் ஆண்டு விவசாயி களுக்குத் தேவைப்படும் முக்கிய உரங்களான யூரியா, டிஏபி, எம்ஓபி  மற்றும் காம்ப்ளக்ஸ் ஆகிய உரத் தேவைகளை கீழ்கண்டவாறு மதிப்பிட்டுள்ளன. நாட்டில் உரத் தேவை அளவானது விவசாயத்துறை மற்றும் விவசாயிகள் நலத்துறையால் மாநில அரசுகளோடு ஒத்துழைத்து மதிப்பிடப்படுகிறது. இந்த தேவை யானது உள்நாட்டு உற்பத்தி மற்றும் சமயத்திற்கான இறக்குமதி ஆகியவை மூலம் எதிர்கொள்ளப்படு கிறது. யூரியாவை பொருத்தவரை, நிய மிக்கப்பட்ட 3 மாநில நிறுவனங்களான, இந்திய பொட்டாஷ் லிமிடெட் (IPL), ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்ட்டிலிசர் லிமிடெட் (RCF Ltd) மற்றும் தேசிய ஃபெர்ட்டி லிசர் லிமிடெட் ( NFL) ஆகியவை மூலம் அரசுக் கணக்கில் இறக்குமதி செய்யப்படுகிறது. மற்றும் யூரியா விற்கான நீண்டகால ஒப்பந்தம் மூலம் ஓமனிலிருந்து இறக்குமதி செய்யப்படு கிறது. உள்நாட்டு உற்பத்தி மற்றும் தேவைகளுக்கிடையேயான இடைவெளியை பூர்த்தி செய்ய வழக்க மான அடிப்படையில் யூரியாவை அரசு இறக்குமதி செய்கிறது.  ந.நி.