அயோத்தி ராமர் கோவில் ரூ.400 கோடி வரி செலுத்தியதாம்!
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ராமர் கோவிலை நிர்வகித்து வரும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக் கட்டளை நிர்வாகம், “கடந்த 5 ஆண்டுக ளில் அரசுக்கு சுமார் ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளதாக” அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அறக்கட்டளையின் செய லாளர் சம்பத் ராய் மேலும் கூறுகையில், “அயோத்தி ராமர் கோவில் நிர்வாகம் கடந்த 5 ஆண்டுகளில் அரசுக்கு சுமார் ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளது. அவற்றில் ரூ.270 கோடி ஜிஎஸ்டியா கவும், மீதமுள்ள ரூ.130 கோடி இதர வரிக ளாகவும் செலுத்தப்பட்டது” என அவர் கூறினார். நாங்களும் வரி கட்டுகிறோம் என்ப தற்காகவா? அல்லது எங்களிடம் வரி மூலம் ஒன்றிய ஆட்சியாளர்கள் பணத்தை பறிக்கிறார்கள் என்பதற்காகவா? என ராமர் கோவில் நிர்வாகம் தெளிவான விளக்கம் எதுவும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“அசலுடன், வட்டி கட்டிய பிறகே நகைகளை மறு அடமானம் வைக்க முடியும்”
தங்கநகைக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டு நெறிமுறை களை வெளியிட்டுள்ளது. அதில், “அசலுடன், வட்டி கட்டிய பிறகே நகை களை மறு அடமானம் வைக்க முடியும்” என அறிவித்துள்ளது. அதாவது இந்த அறிவிப்பின் மூலம் நகை கடன் வாங்கியவர்கள் அதற்கான அவகாசம் முடிந்ததும், வட்டி மட்டும் கட்டி மறு அட மானம் வைக்கும் முறையை ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் இனி மேல் நகை கடன் வாங்கியவர்கள் கால அவகாசம் முடிந்ததும் மொத்த பணத்தை யும் கொடுத்து நகையை மீட்டு, மீண்டும் புதியது போலத்தான் அடகு வைக்க முடி யும். அதுவும் மறுநாள் தான் அடகு வைக்க முடியும். ரிசர்வ் வங்கியின் இந்த புதிய கெடுபிடியால் அடகு வைத்த நகைகளை மீட்க செல்லும் மக்கள் விழிபிதுங்கி நிற் கின்றனர். கந்துவட்டிக்கு உதவும் அசலுடன், வட்டியையும் சேர்த்து முழு தொகையை கட்டிய பிறகே மறு அட மானம் வைக்க முடியும் என்பதால் வெளி யில் வட்டிக்கு கடன் வாங்கும் சூழலு க்கு மக்கள் தள்ளப்படுவார்கள். அதாவது ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறை கந்து வட்டிக்கு உதவுமே தவிர, மக்களுக்கு எந்த விதத்திலும் உதவாது.