tamilnadu

img

விழிப்புணர்வு கையேடு - - சுபொஅ

நாம் வாழும் இந்த உலகம் எப்படி உருவானது? ராகுகாலம், எமகண்டம், ஜாதகம், ஜோதிடம் போன்றவைகளுக்கும் அறிவுக்கும் ஏதேனும் சம்மந்தம் உண்டா? தீண்டாமையின் வேர் எது? காடுகளையும் நீர் வளத்தையும் ஏன் பாதுகாக்க வேண்டும்? மழைநீர் அறி வோம் மறைநீர் அறிவோமா? பூமி, பசுங்கூட விளைவுகள் தகவல்கள்  இப்படி தான் படித்தறிந்த செய்தி களை எளிமையாய் சகமனிதனுக்கு கடத்தும் முயற்சியே ஆர்.ஹரிஹர னின் இந்த எளிய விழிப்புணர்வு நூல். சின்னச் சின்ன கட்டுரைகள். நிறைய தகவல்கள். வண்ணக் காகிதங்களில் படங்கள் எல்லாம் சேர்த்து வாசிப்புக்கு எளிதாய்  காட்சிக்கு இனிதாய்  பொதுத் தகவல் களைக் கோர்த்து இந்த விழிப்புணர்வு பிரச்சார சிறு கையேட்டை தோழர்  ஹரிஹரன் தந்துள்ளார் . வாழ்த்துகள்.  புதிய வாசகர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். அறிவியல் ஆர்வத்தைத் தூண்டுவோம்.

உலக மக்கள் அனைவரும் உறவினர்களே!
விழிப்புணர்வு கையேடு
ஆசிரியர் : ஆர்.ஹரிஹரன்,
 நூல் தொடர்புக்கு:
98422 34835 / 97897 50109
பக்கங்கள் : 20,
விலை : ரூ.20/