சென்னை, ஜூன் 11- இலக்கியத் துறையில் சிறப்பாக தொண்டாற்றி வரும் பாமா என்ற புனைபெயரில் எழுதும் ஃபாஸ்டினா சூசைராஜூக்கு தமிழக அரசின் ‘அவ்வை யார் விருது’ செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னணி எழுத்தாளரான பாமாவின் கருக்கு, சங்கதி, வன்மம், மனுசி போன்ற நாவல்கள், குசும்புக்காரன், கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமை யும் போன்ற சிறுகதை தொகுப்புகள் கவனத்தைப் பெற்றன. ‘கருக்கு’ ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, 2000ஆம் ஆண்டின் ‘கிராஸ் வேர்ட்புக்’ விருதை வென்றது. மேலும், தெலுங்கு, கன்னடம், மலை யாளம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ‘வன்மம்’ நாவல் ஆங்கிலம், தெலுங்கு, கன்னட மொழி களிலும், ‘சங்கதி’ பிரெஞ்சு, ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும், ‘குசும்புக்காரன்’, ‘ஒரு தாத்தாவும் எருமையும்’ சிறுகதை தொகுப்புகளில் இருந்து சில கதைகள் ஆங்கிலம், `ஹிந்தி, உருது, கன்னடம், குஜராத்தி’ ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கல்வி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம், மகளிர் உரிமை, மத நல்லி ணக்கத்தை ஊக்குவித்தல். தமிழுக்கு சேவை, கலை, இலக்கியம், அறிவியல், ஊடகம், நிர்வாகம் ஆகிய பல்வேறு துறை களில் முன்மாதிரியாகத் தொண்டாற்றிய பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மகளிர் தினத்தன்று சமூக நலன் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசால் ‘அவ்வையார் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும் சான்றிதழும் வழங்கப் படும்.