மதுரை, பிப்.12- பொங்கல் திரு நாளின் போது, அவனியா புரம், பாலமேடு, அலங்கா நல்லூரில் நேரமின்மை காரணமாக வாடிவாசலில் அவிழ்த்து விடமுடியாமல் போன காளைகளுக்கு வாய்ப்பு வழங்கும் வித மாக, அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிரா மத்தில் அமைந்துள்ள கலை ஞர் நூற்றாண்டு அரங்கத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தமிழக துணை முத லமைச்சர் உதயநிதி ஸ்டா லின் பிறந்த நாளை முன்னிட்டு பிப். 11, 12 தேதி களில், மதுரை கிழக்கு சட்ட மன்றத் தொகுதி சார்பில் நடைபெற்ற இந்த ஜல்லிக் கட்டு போட்டியை, அமைச்சர் பெ. மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், 1800-க்கும் மேற்பட்ட காளைகளும், 800-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டனர். வெற்றிபெற்ற காளைகளின் உரிமை யாளர்களுக்கும், காளை களை அடங்கிய வீரர் களுக்கும் தங்ககாசு, சைக்கிள் கள், மிக்சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டி களை மாவட்ட கலெக்டர் சங்கீதா, மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம், மாவட்ட நீதிபதி பாக்கிய ராஜ் உள்ளிட்ட பலர் பார்வை யிட்டனர். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கால ரியில் அமர்ந்து போட்டி களைப் பார்வையிட்டனர். ஜல்லிக்கட்டுக்காகவே அமைக்கப்பட்ட அரங் கத்தில் அமர்ந்து, ஜல்லிக் கட்டு போட்டியை பார்ப்பது புதுவித அனுபவத்தை கொடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர். இவர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.