tamilnadu

ஆட்டோ டிரைவர் மீது கந்து வட்டி கும்பல் தாக்குதல்

ஆட்டோ டிரைவர் மீது கந்து வட்டி கும்பல் தாக்குதல்

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில்  ஆட்டோ ஒட்டுநர்மீது கந்து வட்டி கும்பல் தாக்குதல்  நடத்திய சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத  போலீசாரை கண்டித்து உறவினர்கள் இராமநாதபுரம் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் ஆட்டோ ஒட்டுநர் ஒருவர்  கந்துவட்டி கும்பலால் சரமாரியாக தாக்கப்பட்டதாக வும், அது குறித்து புகார் அளிக்க இராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்திற்கு வந்த பாதிக்கப்பட்ட ஆட்டோ  ஒட்டுநர் ‘சேதுமாணிக்கம்’ அங்கே விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டதாகவும், இதுகுறித்து  புகார் அளித்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் குற்றவாளி கள் மீது போலீசார் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை யும் எடுக்கவில்லை என்றும் உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியரை சத்ரிய நாடார் சங்க மாநில தலைவர் வீரமணி தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை  இராமநாதபுரத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.