சனா: சவூதி அரேபியா மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து நடத்திய தாக்குதல்களில் அப்பாவி ஒருவர் கொல்லப்பட்டார். ஏமனில் உள்ள அரசைக் கவிழ்த்துவிட்டு தங்கள் ஆதரவு பெற்ற பொம்மை அரசை அமர்த்த சவூதி அரேபியா முனைந்துள் ளது. ஏமன் மீது நடத்தப்படும் தாக்குதல்களில் ராணுவ இலக்குக ளையும் தாண்டி பொது மக்கள் குடியிருப்புப் பகுதிகள், மருத்துவ மனைகளும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. கடந்த 24 மணி நேரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் அப்பாவி ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். மேலும் பத்து பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏமன் நாட்டின் வட மேற்குப் பகுதியில் உள்ள ஹஜ்ஜா மாகா ணத்தில் 18 முறை சவூதி அரேபிய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.
பெரும் சேதத்தை இந்த மாகாணம் சந்தித்துள் ளன. மேலும் அல் ஜாப், மாரிப் மற்றும் டைஸ் ஆகிய மாகாணங்க ளின் பல பகுதிகளிலும் போர் விமானங்கள் ப்ல முறை குண்டு களை வீசியுள்ளன. இந்தப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்க ளில் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். அதோடு, போர் நிறுத்த உடன்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளை யும் சவூதி அரேபியா மற்றும் அதன் கூட்டாளிகள் விட்டு வைக்க வில்லை. ஹுடாய்டா என்ற துறைமுக நகரம் போர் நிறுத்த உடன் பாட்டுக்கு உட்பட்ட பகுதியாகும். இங்கு கடந்த 24 மணி நேரங்க ளில் மட்டும் 95 முறை போர் விமானங்கள் மீறியுள்ளன. இந்தத் தாக்குதல்கள் மேலும் தொடர்ந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்ச் 2015ல் துவங்கிய சவூதி அரேபியா மற்றும் கூட்டாளிகள் தாக்குதல்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவு வெளிப்படையாகவே இருக்கிறது. உலகிலேயே மோச மான மனிதாபிமான ரீதியிலான விளைவுகளை ஏமன் சந்தித்து வருகிறது. இதுவரையில் ஆயிரக்கணக்கான ஏமன் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஏமன் படைகளும் சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளைக் குறிவைத்து எதிர்த்தாக்குதல்களை நடத்தி வருகிறது.