tamilnadu

கிராம ஊரட்சி உறுப்பினர் குடும்பம் மீது தாக்குதல்

மதுரை, ஜன.6- மதுரை கள்ளிக்குடியை அடுத்துள்ள மையிட்டான்பட்டி ஊராட்சி வார்டு 2-ஆவது உறுப்பினராக ஜி.பாண்டீஸ்வரி வெற்றி பெற்றுள்ளார். இவர் சனிக்கிழமை இரவு தனது கணவர் ஞானசேகரன் மற்றும் உறவினர்கள் ஆறுமுகம், சேகர் ஆகியோருடன் வீட்டு வாசலில் அமர்ந்துபேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது மூன்று கார்களில் வந்த கும்பல் மூன்று பேரையும் அரிவாள் மற்றும் அம்புகளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடி உள்ளனர். இந்ததாக்குதலில் படுகாயமடைந்த ஆறுமுகம், சேகர், ஞானசேகரன் ஆகியோருக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக மூன்று பேரும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். 

;