tamilnadu

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஓய்வு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த
வலியுறுத்தி ஓய்வு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், மூத்த உறுப்பினரும், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருமான கு. வேதரெத்தினம் தலைமையில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் தோழர் கே.ஆர். முருகானந்தம் துவக்கவுரையாற்றினார். அவர் பேசும்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது நிரம்பியவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் 10% வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்து காசு இல்லா மருத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் முதலான கோரிக்கைகளை விளக்கினார்.   தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மாநில செயற்குழு உறுப்பினர் சி. செல்லதுரை, வட்டத் தலைவர் பி.ஜெகவீரன், வட்டப் பொருளாளர் ஜி தருமையன், ஓய்வு பெற்ற கருவூல அலுவலர் சேகர், வருவாய்த்துறை ஊழியர் சங்க பொறுப்பாளர் தமிழரசன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். மாவட்ட அமைப்பாளர் மா. சண்முகம் நிறைவுரையாற்றி நன்றி கூறினார்.