ஈரோடு ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் வெள்ளியன்று, குழுவின் தலைவரும், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.வெங்கடாச்சலம், வி.சி.சந்திரகுமார், மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.