tamilnadu

img

கொடூரத் தாக்குதல் நடத்திய அறநிலையத் துறை உதவி ஆணையர்

கொடூரத் தாக்குதல் நடத்திய அறநிலையத் துறை உதவி ஆணையர்

அடிமனை பயனாளிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் 

மயிலாடுதுறை, மே 18 - மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில்  வருவாய்த் துறை, காவல்துறை அனுமதி யின்றி ரவுடிகளுடன் வந்து பொதுமக்கள், தலைவர்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்திய இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இராணியை கண்டித்து தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குத்தாலம் பேருந்து நிலையம் அருகில்  சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டத் தலைவர் த. இராயர் தலைமை வகித்தார்.  குத்தாலத்தில் அரசுக்குச் சொந்தமான நத்தம் புறம்போக்கு மற்றும் தனிநபர் இடத்தில் கண்ணன் என்பவர் வணிகம் செய்து  வரும் நிலையில், அறநிலையத் துறையினர்  எந்த ஒரு ஆவணங்களும் இல்லாமல் கோயி லுக்குச் சொந்தமான இடம் என வாடகை வசூல் செய்து வருகின்றனர். இது சம்பந்த மாக வழக்கு நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், வருவாய்த்துறை, காவல்துறை அறிவுறுத்தல், உத்தரவு களையும் மீறி ஆக்கிரமிப்பு எனக் கூறி மே 15  அன்று இரண்டு அரசு வாகனங்களில், இந்து  சமய அறநிலையத்துறை துணை ஆணையர்  ராணி தான் “எவிக்ஸன் ராணி” எனக்கூறிக் கொண்டு கடுமையான ஆயுதங்களுடன் 40-க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் வந்தார். இதுகுறித்து கேள்வி எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், தமிழ்நாடு  விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.ஸ்டாலின் மற்றும் வணிகரான கண்ணன் உள்ளிட் டோரை, ராணி தலைமையிலான அடியாட் கள் அநாகரீகமாகப் பேசி கடுமையாக தாக்கி நாற்காலிகளை தூக்கி வீசியுள்ளனர். பொதுமக்கள், வணிகர்கள் திரண்டு அடி யாட்களை விரட்டியடித்ததோடு, ரவுடிகள் வந்த அரசு வாகனத்தை சிறைப்பிடித்து குத்தாலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளனர். 4 வர்த்தகர்கள் இந்த தாக்குத லில் படுகாயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.  அறநிலையத் துறையின் இந்த அராஜக நடவடிக்கையை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன், மாநிலப் பொருளா ளர் எஸ்.துரைராஜ், மாவட்டச் செயலாளர் ஏ.ஆர். விஜய், விவசாயத் தொழிலாளர் சங்க  மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின் மற்றும்  அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வர்த்தக  சங்க நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.