tamilnadu

img

புதுகை உள்விளையாட்டரங்கம் அமைக்கும் பணி 6 மாதங்களுக்குள் முடிக்க அறிவுறுத்தல்

புதுக்கோட்டை,  அக்.25 - புதுக்கோட்டை உள் விளையாட்டரங்கம் அமைக் கும் பணியை, 6 மாதங்க ளுக்குள் முடிக்க அறிவுறுத் தப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக் கணக்குக்குழுவின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ., தெரிவித்தார்.  புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற பொதுக் கணக்குக் குழுவின் ஆய்வுக்குப் பிறகு  அவர் அளித்த பேட்டி: புதுக்கோட்டையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட உள்  விளையாட்டரங்கம் அமைக் கும் பணியை விரைவில் முடிப்பது தொடர்பாக, குழு வின் சார்பில் துணை முதல்வர் மற்றும் அவரது துறைச் செயலரிடம் பேசி யுள்ளோம். 3 முதல் 6 மாதங் களுக்குள் இப்பணிகளை  முடிக்க உறுதியளித்தனர். அரசு விளையாட்ட ரங்கம் அமைந்துள்ள காட்டுப்புதுக்குளத்தில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த ஆட்சி யர் உள்ளிட்ட அலுவலர் களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. போர்க்கால அடிப் படையில் இப்பணியை மேற்கொள்ளவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராஜா ராஜகோபால தொண்டைமான் நூற் றாண்டு விழாவின் நினை வாக அமைக்கப்படவுள்ள மணிமண்டபத்துக்கு கூடு தல் இடம் ஒதுக்கீடு செய்ய  கடந்த முறை குழு வந்த போது கோரிக்கை வைத்த னர். இப்போது ஆட்சியர் அலுவலகத்தின் முன்பகுதி யில் கூடுதல் இடத்துடன் மணிமண்டபம் அமைப்பதற் கான பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. மாநில அரசு மட்டுமே மது விலக்கை கொண்டு வந்தால், அருகிலுள்ள கர்நா டகம், புதுச்சேரி, ஆந்திரம்  மற்றும் கேரள மாநிலங்க ளுக்குச் சென்று மது அருந்துவார்கள். எனவே, நாடு முழுவதும் தேசிய அள விலான மதுவிலக்கு கொள் கையை கொண்டு வந்தால் மட்டுமே முழுமையாக அத னை நிறைவேற்ற முடியும்.  கூட்டுறவுத் துறையில், வீடு கட்டும் திட்டத்தில் முறை கேடுகள் நடந்ததாக கூறப் படுவது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது. நிதி நிலை அறிக்கையில் தெரி விக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டவை குறித்து தலைமைத் தணிக்கை இயக்குநர் அலு வலகம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். அவற்றை பேரவையின் தணிக்கைக் குழு ஆய்வு செய்யும் என்றார்.  முன்னதாக, திரு வரங்குளத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு  கட்டும் பணி, அரசு மேல் நிலைப் பள்ளி, நியாய விலைக் கடை, கலைஞர்  கருணாநிதி விளையாட்ட ரங்கில் உள்விளையாட்ட ரங்கம் கட்டுமானப் பணி  ஆகியவற்றையும் இந்தக்  குழுவினர் பார்வையிட்டனர். பொற்பனைக்கோட்டை அகழாய்வுப் பணி நடை பெறும் இடத்தையும் பொது தணிக்கைக் குழுவினர் பார்வையிட்டனர். ஆய்வின்போது, மாவட்ட  ஆட்சியர் மு.அருணா, கூடு தல் ஆட்சியர் அப்தாப்  ரசூல், மேயர்செ.திலக வதி, சட்டமன்ற உறுப்பி னர்கள் எம்.சின்னதுரை, வை.முத்துராஜா, குழு உறுப்பினர்கள் எம்எல்ஏ க்கள் அக்ரி எஸ்எஸ் கிருஷ்ணமூர்த்தி, ப.அப்துல் சமது, கோ. ஐயப்பன், எஸ்.சந்திரன், எஸ்.சேகர் மற்றும் பேரவை இணைச்  செயலர் பா.ரேவதி ஆகி யோர் இடம்பெற்றிருந்தனர்.