tamilnadu

img

பெரம்பலூர் மாவட்ட புதிய ஆட்சியராக அருண்ராஜ் பதவி ஏற்பு

பெரம்பலூர் மாவட்ட  புதிய ஆட்சியராக அருண்ராஜ் பதவி ஏற்பு

பெரம்பலூர், ஜுன் 27-   பெரம்பலூர் மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும், அரசின் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு நேரடியாகவும் விரைவாகவும் சென்று சேரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த கிரேஸ் பச்சாவ் தமிழக அரசின் வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறையின் கூடுதல் செயலாளராக பணியிட மாற்ற செய்யப்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த அருண்ராஜ் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து, அருண்ராஜ் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம், பொறுப்புகளை கிரேஸ் பச்சாவ் ஒப்படைத்து அவருக்கு வாழ்த்து கூறினார். மேலும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உள்ளிட்ட அதிகாரிகள் புதிய மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.