tamilnadu

அருந்ததியர் உள்ஒதுக்கீட்டிற்கு காரணம் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் ஆதித்தமிழர் கட்சி கு.ஜக்கையன் பேட்டி

மதுரை, ஆக.29- அருந்ததியர் உள் ஒதுக்கீட்டின் வெற்றிக்கு முக்கியக் காரணம் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் என ஆதித் தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் கு. ஜக்கையன்  கூறி யுள்ளார். இது தொடர்பாக வெள்ளியன்று மதுரையில்கு. ஜக்கை யன் அளித்த பேட்டி:-அருந்ததியர் உள் ஒதுக்கீடு குறித்து நீதிபதி அருண்மிஸ்ரா உள்ளிட்ட ஆறு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்பு வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறோம். சமூக நீதிக்கு கிடைத்த வெற்றியாகும் இது. தீர்ப்பில், “தற்போது நடைமுறையிலிருக்கும் அருந்ததி யர் உள்ஒதுக்கீடு தொடர்வதில் எந்தச் சிக்கலும் இல்லை எனவும், பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டைபகிர்ந்தளிக்கும் உரிமை மாநில அரசுக்கு உண்டு எனவும்,  மேலும் தெளி வைப் பெறுவதற்காக ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன  அமர்விற்க்கு மாற்றுவதாகவும் கூறப்பட்டுள்ளது .  ஏற்கனவே, ஆந்திராவில் மாதிகா, மாலா உள்ளிட்ட பிரிவு மக்களுக்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேச அரசு கொண்டு வந்த உள்ஒதுக்கீட்டை தடை செய்து2005 -ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும். அதில் பல முக்கிய அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பதையும் நீதிபதி கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அருந்ததியர் இட ஒதுக்கீட்டிற்கு அடிப்படைக் காரணமாக இருந்த திமுக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவிக்கிறோம்.  அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை அடுத்த கட்டநகர் விற்கு கொண்டு செல்லவும், சமூக நீதியில் சமநீதி கிடைக்கவும் 18சதவீத பட்டியலின ஒதுக்கீட்டில் அருந்ததி யர் இடஒதுக்கீட்டை ஆறு சதவீதமாக  அதிகரிக்கஅதிமுக அரசை வலியுறுத்த வேண்டும்.  அதிமுக அரசு கடந்த பத்தாண்டுகளாக அருந்ததியர் இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தவில்லை.  வருங்காலத்தில் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும். அதை ஆறு சதவீதமாக உயர்த்த வேண்டும்.  அருந்ததியர் சமூகத்தில் தகுதியான ஆள் இல்லாத நிலை யில் பிற பட்டியலின மக்களைக் கொண்டு அருந்ததியர் இட ஒதுக்கீட்டை நிரப்பலாம் என்ற திருத்தத்தை அதிமுக அரசு ரத்து செய்ய வேண்டும். ஏனெனில் இதையே காரணமாக காட்டி அருந்ததியர் இடஒதுக்கீடு தவறாக மற்றவர்களுக்கு மடைமாற்றம் செய்யப்படுகிறது .  உதாரணமாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 2011- ஆம் ஆண்டு அருந்ததியர் உள் ஒதுக்கீட்டின் கீழ் அறிவிக்கப் பட்ட 21 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 19 இடங்கள் பிற தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது .  நிரப்பப்பட்ட இடங்களில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. தமிழ்நாடு முழு வதும் இதே நிலைதான். கடந்தாண்டுகளில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு முறையாக நிரப்பப்படாதது குறித்து நீதி விசா ரணை நடத்த வேண்டும் என்றார். செய்தியாளர் சந்திப்பின்போது விடுதலைவீரன், விடுதலைக் குமார்,  சுப்பிரமணி, முருகன், துணைச்செயலாளர் முனீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.