tamilnadu

img

கலைஞர் கைவினைத் திட்டம் துவக்கம்

கலைஞர் கைவினைத் திட்டம் துவக்கம்

திருவாரூர் மாவட்டத்தில்

திருவாரூர், ஏப்.19-  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் கலைஞர் கைவினைத் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.  அதனைத்தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட ரங்கில், குறு சிறு, மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், கலைஞர் கைவினைத் திட்ட நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே. கலைவாணன் ஆகி யோர் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டத்தில், கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 384 விண்ணப்பங்களில், 319 விண்ணப்பங்கள் ரூ.146.42 லட்சம் கடன் வழங்க வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டதில், வங்கியால் 93 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டு ரூ.42.49 லட்சம் கடனுதவி பெறப்பட்டு உள்ளது.  ஆர்வமுள்ள தொழில் முனைவோர் இத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பபிப்பதற்கான வழிகாட்டு தல்கள் பெற மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், விள மல், திருவாரூர் -610004 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 9003654894 மற்றும்  8925534014 என்ற எண்ணில் தொலைபேசி வாயிலாகவோ அணுகலாம். இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் (பொறுப்பு) கணபதி சுந்தரம், உதவி இயக்குநர் வெங்கடேஷ், உதவி இயக்குநர் (நிர்வாகம்) பிரபாகரன் மற்றும் எம்எஸ்எம்இ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.