tamilnadu

img

பல்லுயிர் பெருக்க தலமானது அரிட்டாபட்டி

மதுரை, நவ.22- மதுரையிலிருந்து 17 கி.மீ தொலை வில் யானைமலைக்கு வடக்கே,  திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ் சாலையில் நரசிங்கம்பட்டிக்கு வட மேற்கே அமைந்துள்ளது  அரிட்டா பட்டி மலைக்குன்று. இதை ஒட்டி அமைந்துள்ளது அரிட்டாபட்டி கிராமம். மதுரை மாநகரை ‘வாழும் மூதூர்’  என்று பெருமையாகச் சொல்வதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அதில்  ஒன்றுதான் அரிட்டாபட்டி கண்மாய்.  சிதையாத மொழியும், ஊரும், குன்று மாய் இன்றும் பெருமையுடன் நிமிர்ந்து நிற்கிறது அரிட்டாபட்டி.  இங்கு 16-ஆம் நூற்றாண்டில் உரு வாக்கப்பட்ட ஆனைமேல்கொண் டான் கண்மாய் இன்றைக்கும் ‘ஆனைக்கொண்டான் கண்மாய்’  என்று மக்களால் அழைக்கப்படு கிறது.

2,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணர்கால குகைகள், சமணப் படுகை, மகாவீரர் புடைப்புச் சிற்பம் என்று இன்றளவும் பாரம்பரியச் சின்  னங்களை பத்திரப்படுத்தி வைத்தி ருக்கும் அரிட்டாபட்டிக்கு தீராத பெரு மைகள் உள்ளன. மதுரையின் பாரம்  பரியங்களை, கதைகளை முழுமை யாக உள்வாங்கிக் கொள்ள நினைப்ப வர்கள் மிகவும் நிதானமாக எண்  பெருங்குன்றங்களையும் அதைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள கதைகளை யும் அறிந்துகொள்ள வேண்டும். அரிட்டாபட்டியின் மேற்குப்புறம் கழுகு மலை, கழிஞ்ச மலை, நாட்டார் மலை, ராமாயி மலை, ஆப்டான் மலை, தேன்கூடு மலை, கூகைகந்தி மலை என ஏழு மலைகள் இருக் கின்றன. இந்த மலைகளைச் சுற்றி 72 கண்  மாய்கள், 200-க்கும் மேற்பட்ட நீர் ஊற்றுகள், நீர்ச் சுனைகள், மூன்று தடுப்பணைகள் அமைந்துள்ளன. இத்தகைய நீர் ஆதாரங்களால் தான்  இங்குள்ள மலைகளைச் சுற்றி மரம் செடி கொடிகள், மூலிகைச் செடிகள், மரங்கள், பல்லாயிரக்கணக்கான பற வைகள், விலங்குகள் உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்னர் குவாரி முதலாளிகள், தொழில் வளர்ச்சி என்ற பெயரில், இந்த ஏழு  மலைகளையும் உடைத்தெடுக்க முனைந்தபோது, வரலாற்றின் தொன்மையைக் கொண்டாடும் அரிட்டாபட்டி மக்கள் ஒன்றி ணைந்து, வீரம் செறிந்த போராட் டத்தை நிகழ்த்தி, ஊரைக் காத்து நின்றார்கள். அரிட்டாபட்டி பகுதியில் சுமார் 275 வகைப் பறவைகளைப் பறவை யியலாளர்கள் அடையாளம் கண்டி ருக்கிறார்கள்.  இராஜஸ்தானிலும் தமிழகத்தில் அரிட்டாபட்டியிலும் மட்டுமே காணப்  படும் ‘லகடு வல்லூறு’ என்கிற அரிய வகைப் பறவையினம் காணப்படு கிறது. மிகவும் அரிதிலும் அரிதான சிவப்பு வல்லூறு இங்குள்ளது. ஒரு மணி நேரத்தில் 389 கி.மீ. கடக்கும் திறன் படைத்தது. அழிவின் விளிம்  பில் உள்ள தேவாங்கும் இங்குள்ளது.

மதுரை மக்களவை உறுப்பினர்  சு.வெங்கடேசன் தமது தொகு திக்குட்பட்ட அரிட்டாபட்டிக்கு கடந்த ஜூன் 22-ஆம் தேதி வந்தி ருந்த போது மதுரை மாவட்ட வரு வாய்த்துறையினர் சரணாலயம் அமையவுள்ள 193.215 ஹெக்டேர் பகுதியை  அடையாளம் கண்டு அளவீடு செய்து வந்தனர். இவர்களோடு வனத்துறையினரும் இணைந்திருந்தனர். அளவிடும் பணி முடிவடைந்தவுடன் அரிட்டாபட்டி ஊராட்சியில் இந்த நிலங்களை ஒப்ப டைப்பதற்கான தீர்மானம் நிறை வேற்றப்பட்டதைத் தொடர்ந்து தற்  போது உயிர்ப்பன்மை வாய்ந்த பகு தியாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ மாக அறிவித்துள்ளது.  இந்த அறிவிப்பின்படி மதுரை  மாவட்டம் மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அரிட்டாபட்டியில் சர்வே எண் 379/1-இல் 139.230 ஹெக்டேர் நில மும், மதுரை கிழக்கு தாலுகாவிற்கு உட்பட்ட மீனாட்சிபுரம் பிட் 1-இல்  சர்வே எண் 379/2-இல் 0.405 ஹெக் டேர் நிலமும் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கூடுதல்  தலைமைச் செயலாளர் சுப்ரியாசாகு  செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள் ளார். தமிழக அரசின் இந்த அறிவிப் புக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வரவேற்பும், நன்றி யும் தெரிவித்துள்ளார்.