திசைகளின் வேர்களுக்கு பாராட்டு விழா
அறந்தாங்கி, ஏப்.20- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா, திசைகளின் வேர்களுக்கு பாராட்டு விழா அறந்தாங்கி ரஞ்சிதம் அரங்கில் நடைபெற்றது. 20 ஆண்டுகளாக தொடர்ந்து, கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், பெண்கள் மேம்பாடு, சமூக நீதி என்ற தளத்தில் இயங்கி வரும் திசைகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு, அறந்தாங்கி சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனி வட்டாட்சியர் ஜபருல்லா தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. அறந்தாங்கி ஐஎம்ஏயின் முன்னாள் தலைவர் டாக்டர் லட்சுமி நாராயணன், தமிழ் மாநில காங்கிரஸின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் கராத்தே கண்ணையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவிவர்மன் கேபிஎஸ்எஸ்சி தலைவர் சுப்பிரமணியன், வட்டார வள மேற்பார்வையாளர் சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வி கவின்பாரதி, இந்தியன் கணேசன், மெய்ச்சுடர் வெங்கடேசன் முனைவர் முபாரக் அலி, வழக்கறிஞர் அலாவுதீன், யோகானந்தி, கவிஞர் மைதிலி கஸ்தூரி ரங்கன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திசைகள் அமைப்பின் தலைவர் டாக்டர் தெட்சிணாமூர்த்தி தொடக்க உரையாற்றினார். திசைகள் அமைப்பைச் சார்ந்த 21 உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டு, திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பால் நடத்தப்பட்டது. முன்னதாக ஆசிரியர் பாஸ்கரன் வரவேற்றார் நிறைவாக ஆசிரியர் யாஸ்மின்ராணி நன்றி கூறினார்.