tamilnadu

img

நிலஅளவர்கள், வரைவாளர்களுக்கு பணி நியமன ஆணை

சென்னை, மே 15- தமிழ்நாடு அரசுப்  பணியாளர் தேர் வாணையம் மூலம் நிலஅளவர் பணி யிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 698 பேருக்கும், வரைவாளர் பணியிடத் திற்கு தேர்வு செய்யப்பட்ட 224 பேருக் கும் பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சென்னை யில் திங்களன்று (மே 15) நடை பெற்றது.  இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பணி  ஆணைகளை வழங்கினார். வருவாய்த் துறை, மாநிலத்தின் நிர்வாக அமைப் புக்கு முதுகெலும்பாக விளங்கு வதோடு, சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல் படுத்துவதிலும் முக்கிய பங்காற்று கிறது. மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் விளங்கு கிறது.    இந்த துறையின் பணியை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலு வலகக்  கட்டடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல், புதிய வருவாய் வட்டங் களை உருவாக்குதல், காலிப் பணி யிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு  செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் இயங்கும் நிலஅளவை மற்றும் நில வரித்திட்ட துறையில் காலியாக உள்ள நிலஅளவர் மற்றும் வரைவாளர் பணி யிடங்களுக்கான அடிப்படை கல்வித் தகுதியை மாற்றியமைத்து புதிய தொழில் நுட்ப கல்வித் தகுதியின் அடிப் படையில் அரசுப்  பணியாளர் தேர்வா ணையம் மூலம் தேர்வு நடத்தப் பட்டது.  அதில் தேர்வு செய்யப்பட்ட 698 நிலஅளவர்கள் மற்றும் 224 வரைவாளர் களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி னார்.

முன்னதாக, தமிழ்நாடு நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வரை படக் கண்காட்சியை முதலமைச்சர் திறந்து வைத்தார். கண்காட்சியில் பண்டைய சென்னை மாகாண வரை படங்கள், மொழிவாரி மாநிலங்கள் பிரிக் கப்பட்டதற்கு பிறகுள்ள சென்னை வரை படங்கள், தற்போதைய மாநில வரை படங்கள், மாவட்டங்களின் வரை படங்கள் இடம்பெற்றிருந்தன. நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன், இந்து சமயம் மற்றும் அற நிலையத்  துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநக ராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா, கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபா கர், வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த், நில சீர் திருத்தத் துறை முதன்மைச் செயலாளர்  பீலா ராஜேஷ்,நில நிர்வாக ஆணை யர் எஸ்.நாகராஜன், சமூக பாது காப்பு திட்டஆணையர் ந.வெங்கடா சலம்,நில அளவை மற்றும் நில வரித்திட்ட இயக்குநர் டி.ஜி.வினய், தமிழ்நாடு நில அளவை அலு வலர்கள் ஒன்றிப்பு மாநிலத் தலை வர் ராஜா, பொதுச்செயலாளர் அண்ணா குபேரன், பொருளாளர் ஸ்டான்லி, மாநிலச் செயலாளர் முத்து முனியாண்டி, துணைத் தலைவர்கள் செந்தில் முருகன், தர்மராஜ் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.