தாராபுரம், ஜூன் 8- - தாராபுரத்தில் நடைபெற்ற நெடுஞ் சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க மாநிலக்குழு கூட்டத்தில் முதன்மை இயக்கு நராக ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் தாராபுரம் முருகன் மண்ட பத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் பால சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் அம்சராஜ் சிறப்புரை யாற்றினார். பின்னர் நெடுஞ்சாலைத் துறையில் முதன்மை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கவேண்டும். நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஜூன் 11ந் தேதியன்று கோட்டப்பொறி யாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடத்துவது எனவும், தொழிற் சங்க ரீதியில் ஜனநாயக முறையிலான போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட சாலைப்பணியாளர்கள் மீது காவல் துறையை ஏவிவிட்டு கொடுமைப்படுத்திய நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் மற்றும் தலைமை பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் நெடுஞ்சாலைத்துறையில் கோரிக்கைகள் குறித்து பேசி தீர்க்க வேண்டிய நிலையை விட்டுவிட்டு காவல் துறை அத்துமீறி கைது செய்யப்பட்டதை விசாரணை மேற்கொண்டு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என ஜூன் 14ந் தேதி முதல் 22ந் தேதி வரை சாலைப் பணியாளர்கள் மற்றும் நெடுஞ் சாலைத்துறையில் பணியாற்றும் ஊழியர் களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் நடத்துவது எனவும், முதல்வரிடம் ஜூன் 29ந் தேதியன்று கோரிக்கை மனு அளிப்பது எனவும், ஜூலை 3ந் தேதியன்று அனைத்து கோட்டப்பொறியாளர் அலுவலகங்கள் முன்பு கருப்பு துணி கட்டி மௌனப் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது.