சிம்லா, ஜன.2- பருவநிலை மாற்றம், அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள் ஆகியவற்றால் இமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள் விவ சாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே ஆப்பிள் உற்பத்தியில் இமாச்சலப் பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜம்மு- காஷ்மீர் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், அதிக உற்பத்திச் செலவு, காலநிலை மாற்றம் காரணமாக ஆப்பிள் விவசாயம் மூலம்கிடைக்கும் லாபம் பாதியாகக் குறைந்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் 11 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. அதில் இரண்டு லட்சம் ஹெக்டேர் பழத்தோட்டங்களுக்காக அர்ப்பணிக் கப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள்கள் சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரி டப்படுகிறது. இது மாநிலத்தின் பழ உற் பத்தியில் 50 சதவீதமாகும். இமாச்சலப் பிரதேச தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மாநிலத்தின் தோட்டக்கலைத் துறை பயிர்களை பல் வகைப்படுத்துவதற்கு ஊக்கமளித்து வருகிறது. 2024-ஆம் ஆண்டிற்கு 2.91 கோடி பெட்டி ஆப்பிள்கள் உற்பத்தியாகும் என தோட்டக்கலைத்துறை கணித்திருந்தது. ஆனால் 2024 அக்டோபர் இறுதிவரை 2.07 கோடி பெட்டிகள் மட்டுமே அனுப்பப் பட்டுள்ளன. 84 லட்சம் பெட்டிகள் குறைந்துள்ளன. காலநிலை மாற்றம் குளிர் நிலவ வேண்டிய இந்தத் காலத்தில் வெப்பம் உள்ளது. குறைவான பனிப்பொழிவு (வறண்ட-வெப்பமான குளிர்காலம்) ஆப்பிள் பயிர் வளர்ச்சியைத் தடுக்கும். பாரம்பரிய ஆப்பிள் வகைக ளுக்கு குளிர்காலத்தில் சுமார் 1,400 மணிநேரம் குளிர்ச்சி தேவை. பொதுவாக குளிர்காலம் நவம்பர் மாதத்திற்குப் பிறகு தொடங்கி பிப்ரவரியில் முடிவடையும். இந்திய வானிலை மையம் பனிப்பொழிவு இருக்கும் எனக் கூறியுள்ளதால் விளைச் சல் அதிகரிக்கும் என நம்புகின்றனர் ஆப்பிள் விவசாயிகள். ஆப்பிள் விவசாயி, ராகேஷ் சின்ஹா கூறுகையில், “வெப்பமான காலநிலை மற்றும் அதிக உற்பத்திச் செலவு காரண மாக, ஆப்பிள் உற்பத்தி குறைந்து வருகிறது. ஆப்பிள் விவசாயிகள் தற்போது பாதாம், பிளம், ஆப்ரிகாட், செர்ரி, பேரிச்சம் பழங்க ளைச் சாகுபடி செய்கிறார்கள் என்றார்”. மற்றொரு ஆப்பிள் விவசாயி சஞ்சய் சவுகான் கூறுகையில், பருவநிலை மாற்றத் தால், பேரிக்காய், பேரிச்சம்பழம் தவிர வேறு சில பழங்களை பயிரிட விவசாயிகள் விரும்பு வதால், ஆப்பிள் உற்பத்தி குறைந்து வருகிறது. என்றார்”. மேலும் அவர் கூறுகையில், “உற்பத்திச் செலவு 30 முதல் 40 சதவீதம் அதிக ரித்துள்ளது; ஆப்பிள் பயிர்களில் அடிக்கடி ஏற்படும் பூஞ்சைத் தொற்று மற்றும் பூச்சித் தாக்குதல்கள் செலவுகளை அதிகரித்து உற்பத்தியைக் குறைக்கிறது.” என்றார். இமாச்சலப் பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, சுமார் 5.5 லட்சம் மெட்ரிக் டன் ஆப்பிள் உற்பத்தி செய்கிறது. இது மாநிலத்தின் பொருளாதாரத்தில் ரூ.5,500 கோடிக்கு மேல் பங்களிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.