tamilnadu

img

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சேலம், டிச.15- முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்த மான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. இதில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளி யாகியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராகவும், தொழில்துறை அமைச்சராக வும் பின்னர் மின்சார துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் தங்கமணி.  இவர் தற்போது குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரு கிறார். இவர் அமைச்சராக இருந்த 5 ஆண்டு காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. 

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தங்க மணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகிய 3 பேர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு செய்து நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் தங்க மணி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்த மான 69 இடங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் 14 இடங்களிலும், வேலூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திருப்பூர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் உட்பட அவருக்குச் சொந்தமாக உள்ள 69 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர்  சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக இவர் மின்சாரத்துறை அமைச்ச ராக இருந்த 23.5.2016 முதல் 06.05.2021 கால கட்டத்தில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனது பெயரிலும் தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் பெயரிலும், பல்வேறு அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி குவித்த தாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரகசிய விசா ரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து முதல் தக வல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.  முதல் தகவல் அறிக்கையில், தனது மகன் தரணிதரன் பெயரில் “முருகன் எர்த் மூவர்ஸ்” என்ற நிறுவனம் இயங்கி வருவதாக கணக்கு காட்டியிருந்த நிலையில், பெயரளவில் மட்டுமே அப்படி ஒரு நிறுவனம் இயங்கி வருவதாக கணக்கு காட்டி பதிவுசெய்து முறைகேடாக வரும் வருமானத்தை மறைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

குறிப்பாக 2016 ஆம் ஆண்டு வேட்புமனு தாக்கல் செய்யும்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் பெயரில் உள்ள சொத்து மதிப்பு 1 கோடியே 1 லட்சத்து 86 ஆயித்து 17 ரூபாய் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  2021 சட்டமன்ற தேர்தல் வேட்புமனுத் தாக்க லில் இணைத்து காட்டப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 8 கோடியே 47 லட்சத்து 66 ஆயிரத்து 318 ரூபாயாக இருந்துள்ளது.  இந்நிலையில், 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை முன்னாள் அமைச்சர் தங்கமணி மனைவி சாந்தி மற்றும் மகன் தரணிதரன் ஆகியோர் சம்பா தித்ததாக கூறப்படும் வருமானம் 5 கோடியே 24 லட்சத்து 86 ஆயிரத்து 617 ரூபாய் ஆகும். ஆனால் 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் தரணி தரன் வைத்துள்ள உண்மையான சொத்து மதிப்பு களை கணக்கிட்டுப் பார்க்கும்போது 7 கோடியே 45 லட்சத்து 80 ஆயிரத்து 301 ரூபாய் சொத்துக் களை அதிகமாக வைத்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 

இந்த இடைப்பட்ட காலத்தில் இவர்கள் செலவு செய்ததாக சுமார் 2 கோடியே 60 லட்சத்து 8 ஆயிரத்து 282 ரூபாய் என கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சொத்து மதிப்பு மற்றும் செலவு கணக்குகளை கணக்கிட்டு பார்க்கும் பொழுது சுமார் 4 கோடியே 85 லட்சத்து 72 ஆயிரத்து 19 ரூபாய் வருமானத்திற்கு அதிக மாக சொத்துக்களை குவித்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை செய்ததில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷ் குமார் மேன்ட்ரோ நெட்வொர்க் பிரைவேட் லிமி டெட் என்ற பெயரில் தனியார் சேனலின் இயக்கு நராக இருந்து வருவது தெரியவந்துள்ளது. மேலும், மெட்ராஸ் ரோட் லைன் ஜெயஸ்ரீ செரா மிக், ஸ்ரீ பிளை அண்ட் வணீர், ஏ.ஜி.எஸ் டிரான்ஸ் மூவர், ஸ்மார்ட் ட்ரேட் லிங்ஸ், ஸ்மார்ட் டெக் மற்றும் ஸ்ரீ பிளைவுட், இன்ப்ரா ப்ளூ மெட் டல் ஆகிய நிறுவனங்களிலும் பங்குதாரராக இருந்து வருவது தெரியவந்துள்ளது. தினேஷ் குமாரின் தந்தை சிவசுப்பிரமணியன் இப்பெயரில் எம்.ஆர்.எல் லாஜிஸ்டிக்ஸ் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான லாரிகள் இயங்கி வருகின்றன. முன்னாள் அமைச்சர் தங்கமணி யின் மகளான லதா ஸ்ரீ பெயரில் ஜெயஸ்ரீ பிளை வுட் மற்றும் ஜெயஸ்ரீ பில்ட் புரோ என்ற பெய ரில் நிறுவனங்கள் நாமக்கல் பள்ளிப்பாளை யத்தில் செயல்பட்டு வருகிறது. 

இதுபோன்று கணக்கில் வராமல் கோடிக் கணக்கிலான சொத்துக்களை முன்னாள் அமைச்சர் தங்கமணி தனது பெயரிலும் தனது உறவினர்கள் பெயரிலும் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கிக் குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.  அதுமட்டுமல்லாது சட்டவிரோதமாக சம்பா தித்த பணத்தை கிரிப்டோ கரன்சிகளாக மாற்றி முதலீடு செய்து சொத்துக்களை குவித்து இருப்ப தாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. இதன் அடிப்படையில் ஊழல் தடுப்பு சட்டத் தின் கீழ் முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் தரணிதரன் மீது நாமக்கல் பிரிவு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.  மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்வதற்கும் வழக்கு தொடர்பான விவரங்களை சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. சோதனையின் முடிவில் முன்னாள் அமைச்சர் மற்றும் உறவினர்கள் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் நகை  மற்றும் சொத்து ஆவணங்கள் குறித்து அதிகா ரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.