tamilnadu

img

மீண்டுமொரு காற்றழுத்த தாழ்வு பகுதி வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, நவ. 11 -  தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 6-ஆம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், மியான்மர் நாட்டு கடலோ ரப் பகுதியில் நிலவிய காற்று சுழற்சி யின் காரணமாக, தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தடைபட்டது. இந்நிலையில், தற்போது தென்மேற்கு வங்கக் கடல் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உரு வாக இருப்பதாக வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, விரைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், அது தமிழகத்தை நெருங்கி வந்து நவம்பர் 11 முதல் அதிக அளவில் மழைப்பொழிவைத் தர வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி 24  மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது. இதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது. தாழ்வு பகுதி உருவான 48 மணி நேரத்தில் மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து தென் தமிழ்நாடு மற்றும் வட இலங்கை கடற்பகுதியை நெருங்கும் வாய்ப்பு கள் இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் நவம்பர் 15 வரை ஓரிரு  இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.