மீண்டும் ஒரு பெண் யானை உயிரிழப்பு'
கோவை, மே 23 – உடல்நிலை சரியில்லாத நிலையில் வனத் துறை சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் கோவையில் மீண்டும் ஒரு பெண் யானை உயிரிழந்துள்ளது. கோவை வனக்கோட்டம், மதுக்கரை வனச்சரகம், கரடிமடை சுற்றுக்கு உட்பட்ட போளுவாம்பட்டி பிளாக் 1, யானைகல் சரகம் பகுதியில் வனத் துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப் போது பெண் யானை ஒன்று வியாழனன்று உடல்நிலை சரியில்லாமல் மெலிந்த நிலை யில் இருப்பதைக் வனத்துறையினர் கண்ட றிந்தனர். இதுகுறித்து மாவட்ட வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உட னடியாக கோவை வனக்கால்நடை மருத்து வர் மூலம் வியாழனன்று மாலை முதல் யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வெள்ளியன்று காலை சிகிச்சை பலனின்றி யானை இறந் தது. பின்னர் உதவி வனப்பாதுகாவலர் தலை மையில் தன்னார்வலர்கள் முன்னிலையில் கோவை வனக்கால்நடை மருத்துவர் மூலம் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் யானை உயிரிழப்புக்கு முழுமையான கார ணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத மலை அடிவாரத்தில் குட்டியுடன் வந்த காட்டு யானை ஒன்று உடல்நிலை குறைவால் உயிரிழந்தது. அதனை பிரேதப் பரிசோதனை செய்து பார்த்தபோது, வயிற்றில் 15 மாத மாக குட்டி யானை இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த யானையின் வயிற்றில் பிளாஸ் டிக் கழிவுகள், புழுக்கள் போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வனப் பகுதியை ஒட்டி பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளதால் இதுபோன்று பல்வேறு வன விலங்குகள் தொடர்ந்து உயிர் இழப்பதாக வன ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ள னர்.