சென்னை, மே 1- பாஜக மாநில தலைவர் அண்ணா மலை தமிழர்கள் மீதும், தமிழ்த்தாய்வாழ்த்து மீதும் அக்கறை கொண்ட தலைவர் கிடையாது என்று திரைப்படஇயக்குநர் அமீர் விமர்சித்துள் ளார். கரூர் மாவட்டம், பள்ளபட்டியில் பிரெண்ட்ஸ் பெடரேஷன் என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில், குற்ற செயல்களை தடுக்கவும், கண்காணிக் கவும் பொதுமக்கள் பாதுகாப்புக் காக 100 சிசிடிவி கேமராக்கள் அர்ப் பணிக்கும் நிகழ்வு தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் டிபிஜி ரவி, திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தி னர்கள் 100 சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் இயக்குநர் அமீர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்க தேர்தல் மாற்றம் வேண்டும் என்பதற்காக நடை பெற்றது.
இந்த தேர்தலும் சாதாரண பொதுதேர்தல் போல மாறிவிட்டது. வாக்கா ளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வெறுப்பு பேச்சு களை பேசுபவர்கள் மீது அரசு வழக்கு தொடர வேண்டும் என்று ஆணை யிட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தினர் மீது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தவறான கருத்துக்களை பலரும் பேசி வருகின்றனர். இந்தியா என்பது ஒரு கூட்டமைப்பு. தேசிய கட்சியின் ஆதரவுடன் சிலர் தவறான கருத்துக்களை பேசி வருகின்றனர். இத்தகைய செயலைத்தான் பாசிசம் என்று குறிப்பிட்டேன். அண்ணாமலை தமிழர்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் கிடை யாது. ஊழல் பட்டியலை வெளியிடு வேன் என்று சொல்லிவிட்டு, சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அவர் எந்த காலத்திலும் தமிழர்கள் மீதும், தமிழ்த்தாய் வாழ்த்து மீதும் அக்கறை கொண்டவராக என்னால் பார்க்க முடியவில்லை என தெரி வித்தார்.