tamilnadu

img

செப்டம்பரில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

ஈரோடு, ஜூலை 15 - தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ஈரோடு என்.ஆர். திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ரத்தினமாலா தலைமை  வகித்தார். மாநில பொதுச்செய லாளர் டெய்சி, பொருளாளர் தேவ மணி, சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ். கண்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதிப்படி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும்  உதவியாளர்களை அரசு ஊழியர் களாக அறிவித்து ஊதியம், ஓய்வூதி யம், பணிக்கொடை உள்ளிட்ட வற்றை நிறைவேற்ற வேண்டும்; இதனை வலியுறுத்தி செப்டம்பர் முதல் வாரத்தில் தமிழகத்தின் அனைத்து வட்டத் தலைநகரங் களிலும் மாலை நேர ஆர்ப்பாட்டங் களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட போராட்டங் களுக்கான தேதிகளை மாநில செயற்குழு அறிவிக்கும் என பொதுச்செயலாளர் டெய்சி அறி வித்துள்ளார்.