tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர்கள் 2 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் 2 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்'

திருச்சிராப்பள்ளி, மே 3- அங்கன்வாடி ஊழியர்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இரண்டாவது நாளாக சனிக்கிழமை அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கொளுத்தும் வெயிலில் குடை பிடித்தப்படியும் முக்காடுகள் அணிந்தும் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.  பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் மேகலா தலைமை வகித்தார், செயலாளர் தமிழரசி, பொருளாளர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின், போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். மாநிலச் செயலாளர் மணிமேகலை, மாநில செயற்குழு உறுப்பினர் சுபா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் கோடை விடுமுறையை மே மாதம் முழுவதும் வழங்கிட வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும். நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் அங்கன்வாடி பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமையும் போராட்டம் தொடர்ந்தது.  திருவாரூர் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக, திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து இரண்டாம் நாளாக சனிக்கிழமையும் நடைபெற்றது. போராட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் வி. தவமணி தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் ஏ. பிரேமா, மாவட்டப் பொருளாளர் பி. மாலதி மற்றும் நிர்வாகிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.  சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.மாலதி, மாவட்டத் தலைவர் எம்.கே.என். அனிபா மற்றும் மாவட்டத் துணை நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். இரண்டாவது நாள் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி, போராட்டக் களத்திற்கு நேரில் சென்று ஆதரவு அளித்து பேசினர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  தஞ்சாவூர்   தஞ்சையில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் எம். லட்சுமி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்க மாநிலப் பொருளாளர் தேவமணி போராட்டத்தை விளக்கி சிறப்புரையாற்றினார். சிஐடியு தலைவர்கள் ஆர்.மனோகரன், கே.அன்பு, அரசு ஊழியர் சங்க  மாவட்டச் செயலாளர் ரமேஷ், துணைத் தலைவர் அஜய் ராஜ், சத்துணவு ஊழியர் சங்கத்  தலைவர் ரவிச்சந்திரன்,  மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சாய் சித்ரா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.  மயிலாடுதுறை இரண்டு நாட்களாக தொடரும் காத்திருப்பு போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சகிலாபானு தலைமை வதித்தார். மாவட்டப் பொருளாளர் வி.அஜிதா, மாநில செயற்குழு உறுப்பினர் பி. பரமேஸ்வரி, மாவட்ட நிர்வாகிகள் வள்ளியம்மை, மகேஸ்வரி, நீலா, லெட்சுமி, கிருஷ்ணவேணி, சுடர்தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  போராட்டத்தை துவக்கிவைத்து சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.ராமானுஜம் பேசினர், கோரிக்கைகளை விளக்கி  அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.லதா உரையாற்றினார். மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் து.கணேசன், ஜாக் பொதுச் செயலாளர் த.ராயர், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். துரைராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் ப. மாரியப்பன், வாலிபர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் மு. குமரேசன், சலவை தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ. உதயகுமார், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் என். பாரதிமோகன் ஆகியோர் பங்கேற்று பேசினர். கோரிக்கை குறித்து அரசு கவனம் செலுத்தாததால் வெள்ளி இரவும் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து சனியன்றும்  நடைபெற்றது.  புதுக்கோட்டை புதுக்கோட்டையில் இரண்டாவது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் சனிக்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.விஜயலெட்சுமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநிலச் செயலர் ஏ. ஸ்ரீதர், அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ். தேவமணி, மாவட்டச் செயலர் ஏசி. செல்வி, பொருளாளர் எஸ்.சவரியம்மாள், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.எம்.ரேவதி உள்ளிட்டோரும் பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  கரூர் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் கரூர் மாவட்ட குழு சார்பில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டு நாட்களாக இரவு பகல் பாராது சாலை ஓரத்தில் படுத்து உரங்கி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பத்மாவதி தலைமை வகித்தார். சிஐடியு சங்க மாவட்ட தலைவர் ஜி. ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், மாவட்டத் துணை தலைவர் எம்.சுப்பிரமணியன், எம்.தண்டபாணி, அங்கன்வாடி சங்க மாவட்டச் செயலாளர் சாந்தி, மாவட்ட பொருளாளர் கலா, சிஐடியு சங்க மாவட்டப் பொருளாளர் ப.சரவணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் 600-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.