tamilnadu

மதுரையில் அனல் காற்று வீசலாம் மக்கள் வெளியே வரவேண்டாம்

மதுரை, மே 25- மதுரையில் திங்களன்றும் அனல்காற்று வீசியது. வெயில் வாட்டியெடுத்தது. மதுரை யில் 39.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதி வானது. மதுரை விமானநிலையத்தில் 40.4 டிகிரி செல்சியல் வெப்பம் பதிவானது. அதிக பட்சமாக கரூர் பரமத்தி, வேலூரில் 41.6 டிகிரி செல்சியல் வெப்பம் பதிவானது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரண மாக அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர், இராமநாத புரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப் புள்ளது. மதுரையில் 40 டிகிரி செல்சியல் முதல் 42 டிகிரி செல்சியல் வரை வெப்பளம் உயர்ந்து அனல் காற்று வீசக்கூடும். அடுத்த இரண்டு தினங்களுக்கு விவசாயிகள், பொதுமக்கள் பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டுமென இந்திய வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.