tamilnadu

img

மக்கள் விரோத மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!

சென்னை, நவ. 27 - தொழிலாளர் - விவசாயிகள் விரோத மற்றும் மக்கள் விரோத மோடி ஆட்சிக்கு வரும் நாடா ளுமன்றத் தேர்தலில் முடிவு கட்டுவோம் என்று சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் தலைவர்கள் சூளுரைத்தனர். நரேந்திர மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் - விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் அனைத்து மாநிலங்களி லும் நவம்பர் 26, 27, 28 ஆகிய 3 நாட்கள் பெருந்திரள் அமர்வு அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனொரு பகுதியாக, சென் னையில் 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற பெருந்திரள் அமர்வில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். மத்திய தொழிற்சங்கங்களின், விவசாய தொழிற்சங்கங்களின் தலை வர்கள் உரையாற்றினர். திங்க ளன்று போராட்டத்தின் நிறைவாக அவர்கள் ஊடகங்களைச் சந்தித்த னர். தொழிற்சங்கங்கள் - விவ சாயிகள் சங்கங்கள் சார்பில் தொமுச பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மு. சண்முகம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

150 ஆண்டுகளாக போராடிப் பெற்ற உரிமையைப் பறிக்க முயற்சி

கடந்த 150 ஆண்டு காலத் திற்கும் மேலாக தொழிலாளர் கள் தொடர்ச்சியாக போராடி, வேலை நிரந்தரம், சம்பள உத்தர வாதம், போனஸ். பணிக்கொடை, ஓய்வூதியம், சமூகப் பாதுகாப்பு, பணியிட பாதுகாப்பு உள்ளிட்ட பல நலன்களை சட்டங்கள் மூலம் பெற்றிருக்கின்றனர். அவை அனைத்தையும் பறிக்கும் வகை யில், இனி யாருக்கும் நிரந்தரப் பணி இல்லை, வேலைக்கும் சம்பளத்திற்கும் உத்தரவாதம் இல்லை என்ற நிலையை மோடி அரசு ஏற்படுத்தியுள்ளது. நிறு வனம் விரும்பினால் வேலைக்கு அமர்த்தவும், வேண்டாம் என் றால் உடனடியாக துரத்தவும், முத லாளிகளுக்கு அதிகாரம் அளித்து, தொழிலாளர்கள் பெற்றுவந்த உரிமைகளைப் பறிக்கும் வகையில் 4 தொழி லாளர் சட்டத் தொகுப்புகளையும் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. அதனை உடனடி யாகத் திரும்பப் பெறவேண்டும்.

எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும்

நீர்ப்பாசனம், நிலச் சீர்திரு த்தம், விவசாய உற்பத்தித் திறன், கடன் மற்றும் காப்பீடு உணவுப் பாதுகாப்பு, விவசாயிகள் தற்கொலையை தடுப்பது, விவசாய சந்தை மற்றும் விவ சாயத்தில் வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு கூறுகள் குறித்து தேசிய விவசாயிகள் ஆணையத்தின் தலைவரும், வேளாண் விஞ்ஞானியுமான எம்.எஸ். சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரைகளை ஒன்றிய அரசு உடனடியாக முழுமையாக  அமல்படுத்த வேண்டும். வேளாண் விளைபொருட்களுக்கு உற்பத்தி விலையைவிட ஒன்றரை மடங்கு அதிகமான குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். அதனை சட்டமாக்க வேண்டும். தானியங்கள் கொள்முதலுக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். 

100 நாள் வேலை திட்ட கூலி பாக்கியை வழங்குக!

மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, மகாத்மா காந்தி ஊரக 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை வெகுவாக வெட்டிக் குறைத்து கிராமப்புற மக்களின் வேலை பெறும் உரிமையை பறித்து வருகிறது. இதன் விளைவாக முன்னோக்கிச் சென்ற கிராமப்புற பொருளாதாரமும், மக்கள் வாழ்க்கையும் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துக்  கொண்டுள்ளன. இத்தகைய கடுமையான சூழலை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு மாதக்கணக்கில் ஊதியம் வழங்க இயலாத நெருக்கடிக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை பாஜக அரசு தள்ளுகிறது. தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய நிதி 2,691 கோடியை வழங்காமல் வஞ்சகம் செய்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அமைச்சரிடம் இடித்துரைத்த பின்னரும் முழுமையாக வழங்க வேண்டிய கூலிப் பாக்கியை வழங்கவில்லை. இதன்  காரணமாக இந்த தொழிலாளர்களுக்கு இரண்டு மாத கால ஊதியம் இப்போதும் கிடைக்கவில்லை. எனவே உடனடி யாக தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய 100 நாள் வேலை திட்ட நிதியை வழங்க வேண்டும். அதேபோல் நாடு முழு வதும் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் 200 நாட்கள் வேலை வழங்கி, அதை நகர்ப்புறத்திற்கும் விரிவாக்கி குறைந்தபட்சம் 600 ரூபாய் ஊதியம் வழங்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

வந்தே பாரத் ரயில் தயாரிப்பை  தனியாரிடம் வழங்கக் கூடாது!

அரசுத்துறை நிறுவனமான சென்னை ஐசிஎப் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் ‘வந்தே பாரத்’ ரயில் தயாரிக்கப்பட்டு வந்தது. தற்போது ஒன்றிய அரசு அதனை தனியார் இத்தாலி நிறுவனத்திடம் வழங்கியுள்ளது. பொதுத் துறையை சீரழித்து, நாட்டின் சொத்தை அந்நிய தனியார் நிறு வனம் அபகரிக்க வாய்ப்பளிக்கும் தனியார் மயத்தை கைவிட வேண்டும்.

‘ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்த நிர்ப்பந்திக்கக் கூடாது

இனி முன்பணம் செலுத்தி, செலுத்திய பணத்திற்கு ஏற்ப மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மின்சார விநியோகத்தை தனியாரிடம் வழங்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது. விவசாயம், கைத்தறிக்கு, விசைத் தறிக்கு வழங்கப்படும் குறிப்பிட்ட அளவு இலவச மின்சாரம், வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ஆகியவை பாதிக்கப்படும் வகையில், ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள இந்த மின்சாரத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். மின்சாரத் துறையை தனியார் மய மாக்கும் முயற்சிகளின் உச்சகட்டமாக மாநில அரசுகளை கட்டாயம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். ஆனால், தொழிலாளர்கள் - விவசாயிகள் மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து  வருகிறது. எனவே,  தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு-குறு நிறுவனங்களுக்கு எதிரான ஒன்றிய பாஜக அரசை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்துவதே எங்களின் இலக்கு. அதனை நிறைவேற்றிக் காட்டுவோம். இவ்வாறு மு. சண்முகம் எம்.பி. கூறினார். சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், தொமுச பொருளாளர் கி.நடராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம், சுப்பிரமணி(எச்.எம்.எஸ்), ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப் பாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பேட்டியின் போது உடனிருந்தனர்.